என்னை ஓரம் கட்ட முடியாது.. 5 ஆண்டுகளுக்கு நான்தான் ஒருங்கிணைப்பாளர்.. ஓபிஎஸ் தரப்பு வாதம்
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளராக தொடர எனக்கு முழு உரிமை உள்ளது என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது.
பொதுக் குழுவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல் செய்தார். இவரது மனு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை தொடங்கியது.
இதில் ஓபிஎஸ் தரப்பு, எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பு என காரசாரமாக விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஓபிஎஸ் தரப்பு தனது வாதத்தில், 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளரை ஓரம் கட்ட முடியாது.

தேர்தல்
தேர்தல் மூலமாக தேர்வு செய்த என்னை பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள். பதவிக்காலம் உள்ள 5 ஆண்டுகள் வரை நான்தான் ஒருங்கிணைப்பாளர். அதிமுக ஒருங்கிணைப்பாளராக தொடர எனக்கு முழு உரிமை உள்ளது. இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்காகவே இந்த பொதுக் குழுவை கூட்டியுள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்திற்கு முற்றிலும் மாறுபாடான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள்.

பொதுக் குழு
பொதுக் குழுவை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும்தான் கூட்ட முடியும். பொதுக் குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு எனக்கு அழைப்பிதழ் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கு தொடர்வதற்கு ஒரு நாளுக்கு முன்புதான் பொதுக் குழு நோட்டீஸ் எனக்கு கிடைத்தது. அதில் தலைமை கழக நிர்வாகிகள் பொதுக் குழுவை கூட்டுவதாக தெரிவித்துள்ளார்கள்.தலைமை கழக நிர்வாகிகள் என்ற அமைப்பே அதிமுகவில் இல்லை.

நீதிமன்றம்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தீர்மானங்களும் பொதுக் குழுவில தாக்கல் செய்த தீர்மானங்களும் வெவ்வேறானவை. பொதுக் குழு நோட்டீஸில் யாருடைய கையெழுத்தும் இல்லை என ஓபிஎஸ் தரப்பு வாதத்தை முன் வைத்தனர். 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த பொதுக் குழு தொடர்பான விவாதங்கள் நீடித்து வருகின்றன. இதனால் இந்த பொதுக் குழு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Recommended Video

பொதுக் குழு
ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழுவின் போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை. அப்படி இருக்கும் போது ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடக்கும் என்ற அறிவிப்பை தமிழ்மகன் உசேன் எப்படி அறிவிக்க முடியும்? என நீதிபதியும் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications