தடுப்பூசி பற்றாக்குறை- மத்திய சுகாதார துறை அமைச்சரையே சில நாட்களாக காணவில்லை: ப சிதம்பரம் அட்டாக்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தடுப்பூசி பற்றாகுறையே இல்லை என சொன்ன மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தனை சில நாட்களாகவே காணவில்லை என மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் சாடியுள்ளார்.
ப. சிதம்பரம் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை! தடுப்பூசி போடுவது ஜூன் 2ம் தேதியிலிருந்து ஏறத்தாழ மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டு்ள்ளது
மத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்கைகள் தாம் இந்நிலைக்கு முழு முதல் காரணம்

'தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது' என்று நாள் தோறும் மார்தட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா?
இவ்வாறு ப. சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications