பாரிவேந்தருக்காக டெல்லியில் நடந்த பஞ்சாயத்து! இரட்டை இலை Vs தாமரை! இழுபறியில் இறுதி முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக -பாஜக கூட்டணியிடையே ஏற்பட்டுள்ள விரிசல் யாரை கலக்கம் அடையச் செய்துள்ளதோ இல்லையோ, இரண்டு கட்சிகளையும் நம்பி பயணித்து வரும் பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், தேவநாதன் யாதவ் உள்ளிட்டோரை கலக்கம் அடையச் செய்துள்ளது.

ஏனெனில் இவர்கள் அனைவரும் இந்த 2 கட்சிகளையும் நம்பி நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் திட்டத்தில் இருந்து வருவது தான். இந்தச் சூழலில் கடந்தமுறை பெரம்பலூரில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரிவேந்தர், இந்த முறை அதிமுக பாஜக கூட்டணி சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியில் களம் இறங்கும் திட்டத்தில் இருந்து வருகிறார்.

Panchayat held in Delhi for Paarivendhar! Double Leaf Vs Lotus! The final result in drag!

ஆத்தூர் அருகே உள்ள பாரிவேந்தரின் பூர்விக கிராமம் கள்ளக்குறிச்சி தொகுதிக்குள் வருவதே அவர் அங்கு போட்டியிட விரும்புவதற்கான காரணமாகும். எல்லாம் சரி, பாரிவேந்தர் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்பது தான் இப்போது எழுந்துள்ள பஞ்சாயத்தாகும். இவரை தாமரைச் சின்னத்தில் போட்டியிட வைக்க பாஜக முயற்சித்து வருகிறது.

திமுக எப்படி கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் களமிறக்கியதோ அதேபோல் இந்தமுறை இரட்டை இலை சின்னத்தில் பாரிவேந்தரை களமிறக்க அதிமுக முனைப்பு காட்டுகிறது. எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்ற பஞ்சாயத்தில், நீங்களாக பேசி ஒரு முடிவுக்கு வாங்க என பாரிவேந்தர் ஒதுங்கிக் கொண்டார்.

Panchayat held in Delhi for Paarivendhar! Double Leaf Vs Lotus! The final result in drag!

அதற்குள் அதிமுக பாஜக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுவிட்டதால் சின்னம் தொடர்பான பஞ்சாயத்தை பற்றி பேச இப்போதைக்கு வாய்ப்பில்லை. இதனிடையே வேலூர் தொகுதியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+