அட பாவமே.. சென்னையில் நாய்களுக்கு பரவும் பார்வோ வைரஸ்.. அறிகுறிகள் என்ன?.. சிகிச்சை முறைகள் என்ன?
சென்னை: இந்தியாவில் ஒன்றரை ஆன்டுகளாக பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் முதல் முறையாக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
இதில் இரண்டு சிங்கங்கள் இறந்தும் போயின. இந்த நிலையில் சென்னையில் நாய்களை தாக்கும் பார்வோவைரஸ் வேகமாக பரவி வருகிறது.குறிப்பாக இந்த பார்வோவைரஸ் நாய் குட்டிகளை எளிதாக தாக்கும். பார்வோவைரஸ் பெரும்பாலும் வயிறு மற்றும் சிறுகுடல்களை பாதிக்கிறது. செல்களை அழிக்கிறது.

அறிகுறிகள் என்ன?
நோயெதிர்ப்பு மண்டலத்தின் திசுக்கள், இதய தசையையும் பார்வோவைரஸ் தாக்க கூடும். பார்வோவைரசில் இருந்து நாய்களை காப்பதற்காக தடுப்பூசிகள் உள்ளன. நாய்களில் மயக்கம், சோர்வு மற்றும் / அல்லது செயலற்ற தன்மை.பலவீனம், கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவையே பார்வோவைரஸ் அறிகுறியாகும்.

நாய்களுக்கு தடுப்பூசி
பார்வோவைரசால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடவில்லை அல்லது முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் நாய்களின் உயிருக்கு ஆபத்தாக முடியும். இந்த நிலையில் சென்னை பெசன்ட் நினைவு விலங்குகள் சிகிச்சை மையம் சார்பில் பார்வோவைரசில் இருந்து தடுப்பதற்காக சென்னையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. பெசன்ட் மெமோரியல் விலங்கு மருந்தகத்தில் தற்போது 250 நாய்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றன.

அறுவை சிகிச்சை
இவை 7 கால்நடை மருத்துவர்களால் பராமரிக்கப்படுகின்றன. குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை, கட்டிகளை அகற்றுதல் உள்ளிட்ட சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பார்வோவைரஸ் குறித்து பெசன்ட் மெமோரியல் விலங்குகள் சிகிச்சை மையத்தின் மூத்த கால்நடை மருத்துவரான ஆர் சூரஜ் மோகன் கூறியதாவது:-

பார்வோவைரஸ்
மழையும் பார்வோவைரசை பரப்பும். ஒரு நாய்க்குட்டி பாதிக்கப்படும்போது, அந்த தொடர்பின் மூலம் மற்ற நாய்களுக்கும் பரவுகிறது. மழை அந்த பகுதியில் உள்ள அனைத்து நாய்க்குட்டிகளுக்கும் பரவ உதவியதாக நாங்கள் உணர்கிறோம். ஜூன் மாத இறுதியில் ஒரு அதிகரிப்பை நாங்கள் கவனித்தோம், ஒவ்வொரு நாளும் சுமார் 25 பாதிப்புகள் உள்ளன என்று அவர் கூறினார்.
Recommended Video

சிகிச்சை இலவசம்
தடுப்பூசிகளால் குணப்படுத்த முடியாத நாய்களுக்கு தேவையான திரவங்கள் மற்றும் மருந்துகளையும் பெசன்ட் மெமோரியல் விலங்குகள் சிகிச்சை மையத்தில் வழங்கப்டுகிறது. நாய்க்குட்டிக்கு 45 நாட்கள் இருக்கும் போது தடுப்பூசியின் முதல் டோஸ்கொடுக்கப்பட வேண்டும். இது தொற்றுநோயை எதிர்த்துப் போராட ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. பெசன்ட் மெமோரியல் விலங்குகள் சிகிச்சை மையத்தில் பெரும்பாலான சிகிச்சை இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications