இன்னும் எத்தனை யுகங்கள் போராடுவது; இந்த சட்டத்துடனும், அரசியலுடனும்? அற்புதம்மாளின் கண்ணீர் பதிவு!
சென்னை: இன்னும் எத்தனை யுகங்கள் போராடுவது - இந்த சட்டத்துடனும், அரசியலுடனும்? என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
Recommended Video

நீதியை கொன்று ஒரு நிரபராதியை உயிரோடு புதைக்கும் காலத்தில் கழியும் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமே. உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன்: கலங்காதீர்கள்" என எனது கைகளை பற்றி உறுதியளித்து இன்றுடன் 7 ஆண்டுகள் முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும்படி பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

7 பேர் விடுதலை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்களின் விடுதலை தொடர்பாக பல ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் முடிவுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆளுநர் கிடப்பில் போட்டார்
இதற்கிடையே தமிழக அரசு இவர்கள் ஏழு பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றி அந்த கோப்பினை தமிழக ஆளுநர் வசம் அனுப்பியது. ஆனால் இந்த நடைமுறை நடந்து பல மாதங்கள் ஆகியும் ஆளுநர் இது குறித்து எந்த முடிவையும் அறிவிக்காமல் கிடப்பில் போட்டு இருந்தார்.

குடியரசுத் தலைவர் நல்ல முடிவு எடுப்பாரா?
இதனை தொடர்ந்து ஆளுநர் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதும், 7 பேர் விடுதலையில் குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் உண்டு என்று ஆளுநர் நைசாக ஜகா வாங்கி விட்டார். குடியரசுத் தலைவராவது நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

பல காலம் காத்திருக்கும் அற்புதம்மாள்
இவ்வாறு 7 பேர் விடுதலை தொடர்பான அறிவிப்புகள் இறுதி வடிவம் பெறாமல் டெல்லி, தமிழ்நாடு என சுற்றி, சுற்றி வருகிறது.7 பேர் விடுதலையில் அதிமுக - பாஜக அரசு கபட நாடகம் ஆடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தனது மகன் பேரறிவாளன் இப்போது வருவார், அப்போது வருவார் நல்ல முடிவு பிறக்கும் என்று பல ஆண்டுகளாக விழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறார் அற்புதம்மாள்.

எத்தனை யுகங்கள் போராடுவது
இந்த நிலையில் அற்புதம்மாள் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், ' நீதியை கொன்று ஒரு நிரபராதியை உயிரோடு புதைக்கும் காலத்தில் கழியும் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமே. உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன்: கலங்காதீர்கள்" என எனது கைகளை பற்றி உறுதியளித்து இன்றுடன் 7 ஆண்டுகள் முடிந்தது. இன்னும் எத்தனை யுகங்கள் போராடுவது - இந்த சட்டத்துடனும், அரசியலுடனும்? என்று கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அற்புதம்மாளிடம் பேரறிவாளன் விடுதலை குறித்து வாக்குறுதி கொடுத்தது தொடர்பாக அற்புதம்மாள் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications