இன்னும் எத்தனை யுகங்கள் போராடுவது; இந்த சட்டத்துடனும், அரசியலுடனும்? அற்புதம்மாளின் கண்ணீர் பதிவு!
சென்னை: இன்னும் எத்தனை யுகங்கள் போராடுவது - இந்த சட்டத்துடனும், அரசியலுடனும்? என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
Recommended Video

நீதியை கொன்று ஒரு நிரபராதியை உயிரோடு புதைக்கும் காலத்தில் கழியும் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமே. உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன்: கலங்காதீர்கள்" என எனது கைகளை பற்றி உறுதியளித்து இன்றுடன் 7 ஆண்டுகள் முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும்படி பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

7 பேர் விடுதலை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்களின் விடுதலை தொடர்பாக பல ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் முடிவுகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆளுநர் கிடப்பில் போட்டார்
இதற்கிடையே தமிழக அரசு இவர்கள் ஏழு பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றி அந்த கோப்பினை தமிழக ஆளுநர் வசம் அனுப்பியது. ஆனால் இந்த நடைமுறை நடந்து பல மாதங்கள் ஆகியும் ஆளுநர் இது குறித்து எந்த முடிவையும் அறிவிக்காமல் கிடப்பில் போட்டு இருந்தார்.

குடியரசுத் தலைவர் நல்ல முடிவு எடுப்பாரா?
இதனை தொடர்ந்து ஆளுநர் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதும், 7 பேர் விடுதலையில் குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் உண்டு என்று ஆளுநர் நைசாக ஜகா வாங்கி விட்டார். குடியரசுத் தலைவராவது நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

பல காலம் காத்திருக்கும் அற்புதம்மாள்
இவ்வாறு 7 பேர் விடுதலை தொடர்பான அறிவிப்புகள் இறுதி வடிவம் பெறாமல் டெல்லி, தமிழ்நாடு என சுற்றி, சுற்றி வருகிறது.7 பேர் விடுதலையில் அதிமுக - பாஜக அரசு கபட நாடகம் ஆடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தனது மகன் பேரறிவாளன் இப்போது வருவார், அப்போது வருவார் நல்ல முடிவு பிறக்கும் என்று பல ஆண்டுகளாக விழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறார் அற்புதம்மாள்.

எத்தனை யுகங்கள் போராடுவது
இந்த நிலையில் அற்புதம்மாள் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், ' நீதியை கொன்று ஒரு நிரபராதியை உயிரோடு புதைக்கும் காலத்தில் கழியும் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமே. உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன்: கலங்காதீர்கள்" என எனது கைகளை பற்றி உறுதியளித்து இன்றுடன் 7 ஆண்டுகள் முடிந்தது. இன்னும் எத்தனை யுகங்கள் போராடுவது - இந்த சட்டத்துடனும், அரசியலுடனும்? என்று கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அற்புதம்மாளிடம் பேரறிவாளன் விடுதலை குறித்து வாக்குறுதி கொடுத்தது தொடர்பாக அற்புதம்மாள் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications