கொடநாடு கொலை பற்றி சட்டசபையில் விவாதிப்பது விதிமீறலா? - பீட்டர் அல்போன்ஸ் சொல்வதென்ன
: மரபை மீறி கொடநாடு எஸ்டேட் விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிப்பதா? என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமாருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பதிலளித்துள்ளார்.
சென்னை: நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது கொடநாடு கொலை வழக்கு பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று அதிமுக ஜெயகுமார் சொல்வது தவறு என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார். சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது இதைபோன்ற பரபரப்பான,பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைபற்றி விவாதிக்கத்தான் விதி எண்55 உள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
கடந்த 2017ஆம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை கொள்ளை விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு அதில் தொடர்பு உள்ளதாக முக்கிய குற்றவாளி சயான் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபையில் கொடநாடு வழக்கு விவகாரம் கடந்த வாரம் புயலைக்கிளப்பியது. கொடநாடு எஸ்டேட் விவகாரம் குறித்து கூச்சலிட்ட அதிமுகவினர் பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டிக்கிறோம் என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இரண்டு நாட்கள் சட்டசபையை புறக்கணித்தனர்.

மடியில் கனம்
சட்டசபையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணைப் பற்றி விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. அதனால் யாரும் பயப்படத் தேவையில்லை என்றும் கூறினார் முதல்வர். தேர்தல் அறிக்கையில் சொன்னபடியே விசாரணை நடைபெறுகிறது. உண்மை நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். அதிமுகவினர் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

மரபை மீறி பேசுவதா?
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கொடநாடு விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. அதிமுகவுக்கு சங்கடங்கள் கொடுப்பதற்காக கொடநாடு விவகாரத்தை பேரவையில் விவாதிக்கின்றனர். நீதிமன்ற அதிகாரத்தை சட்டமன்றமோ, சட்டமன்ற அதிகாரத்தை நீதிமன்றமோ கையில் எடுக்க முடியாது. மரபை மீறி கொடநாடு எஸ்டேட் விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிப்பதா? என்று கேள்வி எழுப்பினார்.

உரிமை மீறல்
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கொடநாடு வழக்கை சட்டப்பேரவையில் விவாதித்தது விதிமீறல். சட்டமன்றத்தில் விவாதிக்க எவ்வளவோ பிரச்னைகள் உள்ளபோது, கொடநாடு விவகாரத்தை பேச வேண்டுமா? உரிமை மீறல் என்பதால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஜெயகுமார் சொல்வது தவறு
ஜெயக்குமாரின் பேட்டிக்கு பீட்டர் அல்போன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது கொடநாடு கொலை வழக்கு பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று அதிமுக ஜெயகுமார் சொல்வது தவறு. வழக்கைபற்றி விவாதம் இல்லை. முன்னாள் முதல்வர் ஆளுநரிடம் தன்னை கொலை வழக்கில் சேர்க்க அரசு முயற்சிக்கிறது என்று புகார் அளித்தால் அதை விவாதிக்கலாம் என்று பீட்டர் அல்போன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சபாநாயகரிடம் அனுமதி
சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது இதைபோன்ற பரபரப்பான,பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கத்தான் விதி எண்55 உள்ளது. அதிமுகவும் சபாநாயகரிடம் அனுமதி பெற்று விவாதத்தில் பங்கேற்கலாம் .வெளியே சொல்லும் குற்றசாட்டுக்களை சட்டமன்றத்தில் சொல்லலாம் என்றும் பீட்டர் அல்போன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
நெல் சாகுபடி வரலாறு காணாத உயர்வு.. கொள்முதலை ‘டபுள்’ மடங்கு ஆக்கக் கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் -
தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார்! ஸ்டாலினை தொடும் தூரத்தில் விஜய்! லயோலா கருத்து கணிப்பு -
சென்னை தலைமை செயலகத்திற்கு வரையும் முக்கிய அரசு அதிகாரிகள்.. பறந்த உத்தரவு.. நாளை முக்கியமான நாள் -
இன்ஸ்டா பிரபலம் தேவா, ஜீவாவை நேரில் அழைத்த முதலமைச்சர்.. அடடா இப்படி ஒரு அட்வைஸ்! வைரல் பின்னணி -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம்












Click it and Unblock the Notifications