ஆர்எஸ்எஸ் “ப்ளான்”.. அப்பாவு பங்கேற்கும் “இந்து மதம் அறிவோம்” மாநாடு! அனுமதிகோரி ஹைகோர்ட்டில் மனு
சென்னை: தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு கலந்துகொள்ளும் மாநாட்டுக்கு அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில் அதற்கு அனுமதியளிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.
சென்னை கிறிஸ்துவ கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் தெய்வநாயகம் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில், "கபாலீஸ்வரர் கோயில் கல்வெட்டியில் இருந்து இந்து மதத்தை தெரிந்துகொள்வோம்" என்ற தலைப்பில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இது தொடர்பாக கலைவாணர் அரங்கம் முன்பதிவு செய்யப்பட்டு இதில் கலந்துகொள்ள சபாநாயகர் அப்பாவுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது இந்த கூட்டத்திற்கு அனுமதிகோரிய மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இதற்கிடையே இந்த மாநாட்டுக்கு அனுமதியளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடுமாறு தெய்வநாயகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், "இந்து ராஷ்டிரம் என்ற பெயரில் புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்குவது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். திட்டமிடுவதாக் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். திட்டம்
இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கெடுக்காத ஆர்.எஸ்.எஸ்., இந்துக்களுக்கு மட்டும் வாக்குரிமை வழங்கும் வகையில், கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள வாக்குரிமையை பறிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்ட வரைவை உருவாக்கி உள்ளது.

மாநாடு
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மதசார்பின்மை, சமூக நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில், யாரும் ஒற்றுமையோடு வாழக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் "கபாலீஸ்வரர் கோயில் கல்வெட்டியில் இருந்து இந்து மதத்தை தெரிந்துகொள்வோம்" என்ற தலைப்பில் மாநாடு நடத்த முன்பதிவு செய்தோம்.

சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு கலந்துகொள்ள இருக்கும் இந்த மாநாட்டிற்கு அனுமதிகோரிய மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே இந்த மனுவை பரிசீலனை செய்து மாநாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications