ரஜினிகாந்த்தால் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி இருக்க முடியும்.. ஆனால்.. குருமூர்த்தி பரபர பேச்சு
சென்னை : திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளை தாண்டி ரஜினிகாந்த்தால் தனித்துவமான தலைவராக திகழ்ந்திருக்க முடியும் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி 'இந்தியா டுடே கன்க்ளேவ் தெற்கு' விவாத நிகழ்ச்சியில் பேசினார்.
குருமூர்த்தி இதுபற்றி கூறுகையில், மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் வெற்றிடத்தை ரஜினிகாந்த்தால் நிரப்பியிருக்க முடியும். துரதிஷ்டவசமாக அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கு முடிவை கைவிட்டுவிட்டார் என்றார்.
ரஜினியை பல வருடங்களாக பார்த்து வரும் தனக்கு அவர் அரசியல் கட்சி தொடங்காமல் கைவிட்டது வியப்பை தரவில்லை என்றார்.

தொடங்குவது கடினம்
குருமூர்த்தி மேலும் கூறுகையில், நான் ரஜினியை அரசியலுக்கு இழுக்க முயற்சிக்கிறேன் என்று மக்கள் கருதினார்கள். ஆனால் மாறாக, ஒரு கட்சியை உருவாக்குவது எவ்வளவு கடினம் என்பதை நான் அவருக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தேன்.

அரசியல் வருகை ரத்து
உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தால் அது மிகவும் கடினமாக இருக்கும் என்று ரஜினி கூறினார். இறுதியில் அரசியலுக்கு வரும் முடிவை கைவிடுவெதன சூப்பர் ஸ்டார், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது மருத்துவர்கள் எடுத்துவிட்டனர்.

துரதிஷ்டவசமானது
நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாட்டிற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று மிகவும் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருந்தார். ஆனால்ரஜினிகாந்தின் உடல்நிலை அரசியலில் நுழைய அனுமதிக்காதது துரதிர்ஷ்டவசமானது . இரண்டு திராவிடக் கட்சிகளிடமிருந்து [AIADMK மற்றும் DMK] இருந்து அவர் அவர்களை விடுவிப்பார் என்று மக்கள் எதிர்பார்த்தனர், ஏனெனில் அடிப்படையில் இரண்டுமே ஒரே கொள்கை உடையவைதான், ஒரே மாதிரியானவைதான். .நிச்சயமாக சொல்கிறேன், ரஜினி, திமுக, அதிமுகவிற்கு மாற்றைஉருவாக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது "என்று குருமூர்த்தி வேதனையை வெளிப்படுத்தினார்.

விரும்பியதை செய்ய முடியவில்லை
ரஜினி அரசியலை விட்டு விலகிய பின்னர் அவரது மனநிலை குறித்து குருமூர்த்தி கூறுகையில், "வெளிப்படையாக, ரஜினி நிம்மதி அடைகிறார், ஆனால் அவர் விரும்பியதைச் செய்ய முடியவில்லை என்பதில் அவர் சோகமாக இருக்கிறார். ஆனால் அவர் அமைதியாக இருப்பவர் அல்ல, ஏனெனில் அவரிடம் உள்ளார்ந்த வேண்டுகோள் மிகவும் வலுவானது மற்றும் சக்தி வாய்ந்தது" என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications