ரஜினி கட்சி, இப்போதைக்கு இல்லையாம்.. தேர்தல் நெருங்கும்போது வாய்ஸ் மட்டும் வரலாமாம்!
Recommended Video

சென்னை: ரஜினி கட்சி இப்போதைக்கு இல்லையாம், வெறும் வாய்ஸ் மட்டும்தானாம். இதுதான் இப்போதைக்கு ஹாட் டாக் ஆக வலம் வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் தனது ஒவ்வொரு பட வெளியீட்டின்போதும் அரசியல் பிரவேசம் குறித்தோ அல்லது பரபரப்பாகவோ ஏதாவது பேசுவது வழக்கம். அதன்பின்னர் அந்தப் பேச்சை அப்படியே அம்போவென விட்டுவிடுவார் என்ற விமர்சனம் எப்போதும் அவர் மீது உண்டு.

இந்த நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு விரைவில் கட்சி ஆரம்பித்து அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அதற்காக அடிமட்டத்திலிருந்து கட்சியை வலுப்படுத்தும் வகையில் நிர்வாகிகள் நியமனம் என்றெல்லாம் தொடர்ந்து நடந்தது.
ரஜினி மன்ற பொறுப்புகளை கவனிக்க லைக்கா நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்த ராஜூ மகாலிங்கம் அழைத்து வரப்பட்டார். ஆனால் அவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்று தூக்கி எறியப்பட்டார். அதனையடுத்து அதிமுகவிலிருந்து வெளியேறிய டாக்டர் இளவரசன் என்பவர் ரஜினி மக்கள் மன்றத்தின் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் நியமிக்கப் பட்ட நாளில் இருந்தே இவர் மீது புகார் பட்டியல் வாசிக்கப்பட்டு வந்தது.
தனக்கு வேண்டாதவர்கள், நீண்டகாலமாக ரசிகர் மன்றத்தில் தீவிரமாக வேலை செய்தவர்கள் என்று பலரையும் மன்றத்திலிருந்து தூக்கியடித்தார். இது குறித்த புகார்கள் ரஜினிக்கு சென்றபோதும் அப்போது அவரது நடவடிக்கைகள் இளவரசனுக்கு ஆதரவாகவே இருந்தன.
இவருக்கும் முன்னாள் ஐ பி எஸ் அதிகாரி ராஜசேகர் என்பவருக்கும் ஏழாம் பொருத்தம். ஏற்கனவே மன்றப் பிரச்சனைகளுக்கு ஐ பி எஸ் அதிகாரி ராஜசேகர் தான் காரணம் என மன்ற நிர்வாகிகள் புகார் தெரிவித்திருந்த நிலையில் இளவரசனுக்கும் ராஜசேகருக்கும் பற்றிக் கொண்டது. இதில் ராஜசேகருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என கைவிரிக்க இளவரசன் ராஜினாமா செய்து விட்டார். இது ஒரு பக்கம் ஓடிக் கொண்டுள்ள உள் குத்துகள்.
இப்போது விஷயம் என்னவென்றால், ரஜினி கட்சி ஆரம்பிப்பது மீண்டும் தள்ளிப் போகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிடப் போவதில்லை. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் ஏதாவது ஒரு தேசியக் கட்சியை பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்பது அவரது எண்ணம். ஆகவே நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் தனக்கென ஒரு தொலைகாட்சி சேனலை ஆரம்பித்து விட்டு அதன் பின்னர் கட்சிக்கான பெயர் உட்பட பிற பணிகளை கவனிக்கலாம் என்பது ரஜினியின் திட்டமாம். அதற்காக தொலைகாட்சி சேனலுக்கான பணிகளும் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் பாட்ஷா பட விழாவில் பேசி அதன் பின்னர் திமுக - த மா க கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்தது போல இப்போதும் வாய்ஸ் மட்டும் கொடுக்கலாம் என்றும் ரஜினி யோசிக்கிறாராம். ஆனால் ரஜினி இப்போது இருக்கும் அரசியல் சூழலில் வாய்ஸ் கொடுத்தாலும் அது எந்த அளவுக்கு செயல்படும் என்பது தேர்தலின் முடிவில்தான் தெரியவரும். ஏனெனில் பாபா பட பிரச்சனையின்போது ரஜினி பாமகவுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்தார். அது அந்த தேர்தலில் எதிரொலிக்கவில்லை. மாறாக பாமக வெற்றி பெற்றது.
இப்போது இருக்கும் அரசியல் களம் படு வித்தியாசமாக இருக்கும் பட்சத்தில் இவர் தேர்தலை சந்திக்காமல் வெறுமனே வாய்ஸ் மட்டும் கொடுப்பது பலனளிக்குமா என்பது கேள்விக்குறியே .. அதை விட முக்கியமாக, இருக்கும் செல்வாக்கையும் அடித்துக் கொண்டு போகும் அபாயமும் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
-
உடல்நிலை சரியில்லை என்று அரசியலுக்கு வராமல் தப்பினார்! ரஜினி பற்றி ப்ளூ சட்டை மாறன் பதிலடி! அடுத்த பஞ்சாயத்து -
செத்துவிழும் மீனெல்லாம் ஆற்றோடு போகும் .. ரஜினிக்காக வைரமுத்து எழுதிய பொக்கிஷம்! வெளிவந்த ரகசியம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல்












Click it and Unblock the Notifications