உடல்நிலை சரியில்லை.. 30 நாள் பரோல் தாங்க.. ராஜீவ் கொலை வழக்கு ராபர்ட் பயஸ் முதல்வருக்கு கடிதம்!
சென்னை: உடல்நலம் சரியில்லை எனக்கூறி 30 நாள் பரோல் கோரி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு இந்தியாவை உலுக்கியது. இந்த வழக்கில் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அதனை உச்ச நீதிமன்ற ரத்து செய்தது.

பேரறிவாளன் விடுதலை
இதற்கிடையே தான் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனை கடந்த மே மாதம் விடுதலை செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றநீதிபதிகள் நாகேஸ்வராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா தீர்ப்பை வாசித்தனர். அதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டனர். மேலும், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142யை பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

ரவிச்சந்திரன்-நளினி வழக்கு
இதற்கிடையே தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் எனக்கூறிய ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்பின் அம்சங்களை அம்மனுவில் சுட்டிக்காட்டியுள்னள. மேலும் இடைக்காலமாக பேரறிவாளனுக்கு வழங்கியதைப் போல தங்களையும் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது.

பரோல் கோரி கடிதம்
இந்நிலையில் தான் சென்னை புழல் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும். நிலையில் 30 நாள் பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். இவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் உள்ள நிலையில் தற்போது பரோல் கேட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.மேலும் 7 பேர் விடுதலையை தொடர்பான தீர்மானத்துக்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது வருத்தமளிக்கிறது எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

2019க்கு பிறகு
இதற்கு முன்பு கடந்த 2019ல் ராபர்ட் பயஸ் 30 நாள் பரோலில் சென்றார். அவரது மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பரோலில் சென்றார். அதன்பிறகு சிறை சென்ற அவர் தற்போது 2வது முறையாக பரோல் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications