Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடல்நிலை சரியில்லை.. 30 நாள் பரோல் தாங்க.. ராஜீவ் கொலை வழக்கு ராபர்ட் பயஸ் முதல்வருக்கு கடிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல்நலம் சரியில்லை எனக்கூறி 30 நாள் பரோல் கோரி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு இந்தியாவை உலுக்கியது. இந்த வழக்கில் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அதனை உச்ச நீதிமன்ற ரத்து செய்தது.

பேரறிவாளன் விடுதலை

பேரறிவாளன் விடுதலை

இதற்கிடையே தான் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனை கடந்த மே மாதம் விடுதலை செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றநீதிபதிகள் நாகேஸ்வராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா தீர்ப்பை வாசித்தனர். அதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டனர். மேலும், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142யை பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

ரவிச்சந்திரன்-நளினி வழக்கு

ரவிச்சந்திரன்-நளினி வழக்கு

இதற்கிடையே தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் எனக்கூறிய ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்பின் அம்சங்களை அம்மனுவில் சுட்டிக்காட்டியுள்னள. மேலும் இடைக்காலமாக பேரறிவாளனுக்கு வழங்கியதைப் போல தங்களையும் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது.

பரோல் கோரி கடிதம்

பரோல் கோரி கடிதம்

இந்நிலையில் தான் சென்னை புழல் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும். நிலையில் 30 நாள் பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். இவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் உள்ள நிலையில் தற்போது பரோல் கேட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.மேலும் 7 பேர் விடுதலையை தொடர்பான தீர்மானத்துக்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது வருத்தமளிக்கிறது எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

2019க்கு பிறகு

2019க்கு பிறகு

இதற்கு முன்பு கடந்த 2019ல் ராபர்ட் பயஸ் 30 நாள் பரோலில் சென்றார். அவரது மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பரோலில் சென்றார். அதன்பிறகு சிறை சென்ற அவர் தற்போது 2வது முறையாக பரோல் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+