தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு.. விழாவில் பங்கேற்க 500 பேருக்கு அழைப்பு!
சென்னை: தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி இன்று காலை பதவியேற்க உள்ளார். கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
Recommended Video
தமிழகத்தின் கவர்னராக இருந்து வந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டார்.

புதிய கவர்னர் ஆர்.என்.ரவி
புதிய கவர்னராக பொறுப்பேற்க உள்ள ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் தமிழகம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். மேலும் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரும் புதிய கவர்னர் ஆர்.என்.ரவியை வரவேற்றனர்.

பதவியேற்கிறார்
புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி இன்று காலை தமிழகத்தின் கவர்னராக பதவியேற்க உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் விழாவில் ஆர்.என்.ரவிக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் கவர்னர் மாளிகையில் திறந்த வெளியில் பந்தல் அமைத்து விழா எளிமையான முறையில் நடைபெறுகிறது.

முக்கிய பிரமுகர்கள் மட்டும்
முக்கிய பிரமுகர்கள் சுமார் 500 நபர்கள் மட்டுமே விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொள்கின்றனர். ஆர்.என்.ரவி தமிழகத்தின் 25-வது கவர்னராக பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த ஆர்.என்.ரவி?
பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆர்.என்.ரவி நாகாலாந்து கவர்னராக இருந்து வந்தவர். முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் பிரதமர் அலுவலகத்திலும் பணிபுரிந்துள்ளார். கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துள்ளார். உளவுத்துறையிலும் பணியாற்றியுள்ள ஆர்.என்.ரவி, 2019ஆம் ஆண்டு முதல் நாகாலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டார். ஆர்.என்.ரவி தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டதில் சந்தேகம் இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications