Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சைலன்ட் ஆலோசனை.. டிடிவி வீட்டு திருமணத்தில் எதிரொலித்த கேசி வீரமணி ரெய்டு.. சட்டென சீறிய சசிகலா?!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சரியாக நேற்று டிடிவி தினகரன் வீட்டு திருமணம் நடந்த அதே நேரத்தில்தான் இன்னோர் பக்கம் முன்னாள் அதிமுக அமைச்சர் கேசி வீரமணி வீட்டிலும் ரெய்டு நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு வந்திருந்த சசிகலாவும், சில அதிமுக, அமமுக நிர்வாகிகளும் ரெய்டு குறித்து சில நிமிடங்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

Recommended Video

    KC Veeramani வீட்டில் கைப்பற்றப்பட்டவை முழு விபரம் | DVAC Raid | Oneindia Tamil

    அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான 35 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இரவு வரை நடத்தப்பட்ட சோதனையில் 34 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு 4.9 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள், 1.8 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர் நோட்டுகள் கண்டறியப்பட்டது.

    இதில் வழக்கிற்கு தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்துக்களை அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சேர்த்து உள்ளதாக அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நேரம் பார்த்து ரெய்டு?

    நேரம் பார்த்து ரெய்டு?

    நேற்று ரெய்டு நடந்த அதே நேரத்தில் இன்னொரு பக்கம் திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் டிடிவி தினகரன் மகள் திருமணம் நடந்தது. டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி துளசி வாண்டையார் பேரன் ராமநாதன் துளசி வாண்டையாருக்கும் இடையில் திருமணம் நடைபெற்றது. பல அமமுக நிர்வாகிகளும், சில அதிமுக நிர்வாகிகளும், சில பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த திருமண விழாவிற்கு பின் சசிகலா ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பேசிக்கொண்டு இருந்தார்.

    பேச்சு அடிப்பட்டு உள்ளது

    பேச்சு அடிப்பட்டு உள்ளது

    இந்த நிலையில்தான் கேசி வீரமணி வீட்டில் நடந்து கொண்டு இருந்த ரெய்டு குறித்தும் இதில் பேசப்பட்டு இருக்கிறது. கேசி வீரமணி வீட்டு ரெய்டு என்று இல்லாமல் மொத்தமாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி உட்பட பலரின் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டுகள் குறித்து ஆலோசனை நடந்துள்ளது. வரிசையாக பலர் ரெய்டில் சிக்குவதை பற்றி பேசி உள்ளதாக தெரிகிறது. அதிலும் அதிமுக தரப்பு இந்த ரெய்டுகளுக்கு எதிராக பெரிதாக எதுவும் செய்யவில்லை என்று சசிகலா கவலைப்பட்டதாக கூறப்படுகிறது.

    சீறிய சசிகலா

    சீறிய சசிகலா

    வரிசையாக ரெய்டு நடக்கிறது.. ஆனால் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறார்கள். இப்படி இருந்தால் திமுகவின் நடவடிக்கை தொடரத்தான் செய்யும் என்று சசிகலா இதில் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. சசிகலா வந்தால் ஓரளவு ஒன்றாக இருந்து ரெய்டுகளை, வழக்குகளை எதிர்கொள்ளலாம் என்பதை போல இந்த குட்டி மீட்டிங்கில் அமமுகவினர் பேசியதாக தெரிகிறது. அதிலும் எடப்பாடி பழனிசாமி குறித்தும் இதில் பேசி இருக்கிறார்களாம்.

    ஏன் எடப்பாடி பழனிசாமி

    ஏன் எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமிக்கு கோடநாடு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டால் அது ஒரு வகையில் அதிமுக தரப்பிற்கு இடியாக மாறும். அதிமுகவில் பிளவை ஏற்படுத்தும். நிர்வாகிகள் வெளியேறும் நிலையை ஏற்படுத்தும். அப்படி நடக்காமல் இருக்க சசிகலா மீண்டும் கட்சிக்குள் வருவதே சரியாக இருக்கும் என்பது போல அமமுக நிர்வாகிகள் மீட்டிங்கில் பேசி இருக்கிறார்களாம். இந்த ரெய்டுகள் வழக்குகளை பயன்படுத்திக்கொண்டு எப்படியாவது மீண்டும் அதிமுகவிற்குள் வர முடியும் என்று சசிகலா நம்புகிறாராம்.

    பன்னீர்செல்வத்திற்கு பாராட்டு

    பன்னீர்செல்வத்திற்கு பாராட்டு

    எடப்பாடி பழனிசாமி தவிர வேறு யார் மீதும் சசிகலா பெரிய அதிருப்தியில் இல்லை என்றே கூறப்படுகிறது. சமீபத்தில் ஓ. பன்னீர்செல்வம் மனைவி மரணத்தில் ஓபிஎஸ்ஸை சந்தித்து சசிகலா ஆறுதல் கூறினார். இது இருவருக்கும் இடையில் கொஞ்சம் இணக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் இதற்கு முன்பே சசிகலா ஓ.பி.எஸ் குறித்து சக நிர்வாகிகளிடம் பாசிட்டிவாக பேசி இருக்கிறாராம். ஓ.பி.எஸ் மீது அவருக்கு கோபம் எதுவும் இல்லை, சசிகலா கட்சிக்குள் வருவதற்கு ஓ.பி.எஸ் தடை கிடையாது. இ.பி.எஸ்தான் இதற்கு முட்டுக்கட்டை போடுகிறார் என்பதால் சசிகலா கொஞ்சம் அவர் மீது கோபத்தில் உள்ளதாக தெரிகிறது.

    தலையிட்டுக்கொள்ளவில்லை

    தலையிட்டுக்கொள்ளவில்லை

    நேற்று திருமணத்தின் போது நடந்த சின்ன மீட்டிங்கிலும் சசிகலா இதை பற்றி புலம்பி பேசியதாக தெரிகிறது. இந்த மீட்டிங்கில் தினகரன் பெரிய அளவில் தலையிட்டுக்கொள்ளவில்லை என்கிறார்கள். கல்யாண பிசியாக இருக்கலாம், அரசியல் பேசுவதற்கான நேரம், இடம் அதுவல்ல என்று நினைத்து இருக்கலாம். அல்லது அதிமுக விஷயத்தில் தலையிட விரும்பாமல் இருக்கலாம்.. ஏதோ ஒரு காரணத்திற்காக தினகரன் இந்த சந்திப்பில் பெரிதாக தலையிட்டுக்கொள்ளவில்லை. அடுத்தடுத்த ரெய்டுகள்.. வழக்குகள் தனக்கு அதிமுகவில் மீண்டும் வாயிலை திறக்கும் என்று சசிகலா நம்பிக்கையோடு காத்திருப்பதாகவே சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+