இப்படி எம்மை புலம்பி அழ விடுவாய் என்று எண்ணவில்லை.. கண்ணீர் விட்ட விஜயபாஸ்கர்.. உருக்கமான கடிதம்!
குழந்தை சுஜித் பலியானது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமான கடிதம் எழுதி இருக்கிறார்.
Recommended Video
சென்னை: குழந்தை சுஜித் பலியானது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமான இரங்கல் கடிதம் எழுதி இருக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை, சேர்ந்த சுஜித் என்ற குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். அன்று மாலை இவரை மீட்கும் பணிகள் துவங்கியது. ஆனால 80 மணி நேர போராட்டம் தோல்வியில் முடிந்தது.
நேற்று இரவு சுஜித் பலியானது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு சுஜித்தின் சடலம் மட்டும் மீட்கப்பட்டது.

கவனித்தார்
இந்த பணிகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கவனித்து வந்தார். சிறுவன் துளையில் விழுந்த அன்று இரவில் இருந்தே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பவ இடத்தில்தான் இருக்கிறார். தொடர்ந்து 4 நாட்களாக அவர் அங்கேயே இருந்து மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டார்.

சுஜித் பலியானது
இந்த நிலையில் சுஜித் பலியானது குறித்து விஜயபாஸ்கர் இரங்கல் கடிதம் எழுதி இருக்கிறார். நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுஜித்தின் அழுகுரல் இன்னும் என்னுள் கேட்கிறது, என் மனம் வலிக்கிறது. நீ எப்படியும் வந்து விடுவாய் என்றுதான் ஊன் இன்றி உறக்கம் இன்றி இரவு பகலாய் இமை மூடாமல் உழைத்தோம்.

அழுகை
இப்படி எம்மை புலம்பி அழ விடுவாய் என்று எண்ணவில்லை. கருவறை இருட்டு போல இருப்பாய் என்று நினைத்தோம். கல்லறை இருட்டு போல மாறுமென எண்ணவில்லை. மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க நினைத்து காத்திருந்தேன். ஆனால் இப்போது மார்சுவரியில் உன்னை பார்க்க மனது வலிக்கிறது.

உன்னுடைய சத்தம்
88 அடி ஆழத்தில் நான் கேட்ட உன்னுடைய மூச்சு சத்தம்தான் என்னை மீட்பு பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில், பாச பிணைப்பில், இணைத்து இயங்க வைத்தது. நான் மட்டுமல்ல இந்த உலகமே உனக்காக அழும் குரல். மனதை தேற்றிக்கொள்கிறேன். இனி நீ கடவுளின் குழந்தை சுஜித் எனக்கு இன்னமும் ஒலிக்கிறது, சோகத்தின் நிழலில், வேதனையின் வழியில் எழுதுகிறேன், என தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications