சீமானின் ‘தேன்மொழி’.. உருளும் பாலுமகேந்திரா, சுகாசினி, சேரன் தலைகள்- போலீசில் விஜயலட்சுமி Part-3
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேன்மொழி என்ற பெண்ணை திருமணம் செய்வதாக கூறி நிச்சயதார்த்தம் செய்து ஏமாற்றிவிட்டார் எனவும் இந்த விவகாரத்தில் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா, நடிகை சுகாசினி மற்றும் இயக்குநர் சேரன் பெயர்களையும் சேர்த்து சென்னை போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தேன்மொழி விவகாரம் குறித்து சென்னை போலீசில் விஜயலட்சுமி கூறி இருப்பதாவது: சீமான் அலுவலகத்தில் இருந்து வேளச்சேரி வீட்டுக்கு செல்லும் போது ஒரு வாகனம் பின் தொடர்ந்து வந்தது. பின்னர் ஒரு பெண், என்னுடைய செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு, தமது பெயர் தேன்மொழி; எனக்கும் சீமானுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பாலுமகேந்திரா, சுகாசினி தலைமையில் இந்த நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண நாளுக்காக காத்திருக்கிறோம் என்றார்.

மேலும், நீங்கள் யார்? எதற்காக சீமான் அலுவலகம் வந்து செல்கிறீர்கள்? எனவும் தேன்மொழி என்ற பெண் என்னிடம் கேட்டார். நான் அவரிடம், சீமான் என் கணவர் என கூறினேன். அப்போது, என்னை சீமான் ஏமாற்றிவிட்டார்; உங்களையும் அதேபோல் சீமான் ஏமாற்றி இருக்கிறார் என்றார்.

இது தொடர்பாக சீமானிடம் நான் கேட்டேன். இதற்கு மழுப்பலான, உண்மைக்கு மாறான தகவலை பேசினார். என்னிடம் சண்டையிட்டு அடித்தார். பின்னர் இயக்குநர் சேரனை தொடர்பு கொண்டு, தேன்மொழி விவகாரத்தை கேட்டதற்கு "ஆமாம்" என்றார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு நானும் என் குடும்பமும் உள்ளானோம். எனக்கு வந்த சினிமா வாய்ப்புகளையும் சீமான் தடுத்தார். சீமான் அடி ஆட்களை வைத்தும் கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனுவும் கொடுத்தேன். இவ்வாறு நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications