செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் என்ஜாய் என்சாமி பாடல்.. அரங்கத்தை அதிர வைத்த பாடகி தீ!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் என்ஜாய் என்சாமி பாடலை பாடி பாடகி தீ மற்றும் மாரியம்மாள் ஆகியோர் அசத்தியுள்ளனர்.
Recommended Video
சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. இதில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பட்டு சட்டை, வேட்டியுடன் கலந்துகொண்டுள்ளார். அதேபோல் தமிழக அமைச்சர்கள், நடிகர் ரஜினிகாந்த், கார்த்தி, கவிஞர் வைரமுத்து ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் இந்தியாவின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் 8 மாநிலங்களின் பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டன. பின்னர் கமல்ஹாசன் குரலில் உருவாக்கப்பட்ட தமிழர்களின் கலாச்சாரம், பெருமை, கல்லணை, கோயில்கள், கவிஞர்கள், இலக்கியம், சோழர்கள் என முப்பரிமான வீடியோ மூலம் காட்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டன.
இதனைத்தொடர்ந்து இசையமைச்சாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற எஞ்சாமி பாடம் பாடப்பட்டது. இதனை பாடகி தீ மற்றும் கர்ணன் மூலம் புகழ்பெற்ற மாரியம்மாள் ஆகியோர் பாடியதோடு, நடனமாடி அசத்தினர். இது பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.












Click it and Unblock the Notifications