கலகமா பண்றீங்க.. ஆவேசமான அப்பாவு.. எடப்பாடி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற உத்தரவு
சென்னை: சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அனைவரையும் குண்டு கட்டாக வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதிமுக எம்எல்ஏக்கள் பேசுவது எதுவும் அவைக்குறிப்பில் ஏறாது என்றும் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை இரண்டாம் நாள் கூட்டம் தொடங்கி உடனே அனல் பறந்தது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுக எம்எல்ஏக்கள் அமளி துமளியில் ஈடுபட்டனர்.
ஆர்.பி உதயகுமாரை எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியில் நியமித்தது குறித்து முடிவெடுத்து அறிவிக்குமாறு வலியுறுத்தினர். இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு அனைவரையும் இருக்கையில் அமருமாறு கூறினார்.
அதனை ஏற்காத அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இன்றைக்கு இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் வருகிறது எனவே அதை ஆதரிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு ஆதரவாக கலகம் எழுப்புகிறீர்கள்.
திட்டமிட்டு சபைக்கு வந்து கலகம் செய்கிறீர்கள். அதற்கு நான் விடமாட்டேன் என்று கூறிய சபாநாயகர் அப்பாவு, அமளியில் ஈடுபட்ட அனைவரையும் சபாநாயகர் அப்பாவுவை அவையை விட்டு வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனையடுத்து அனைவரும் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
சட்டசபை வளாகத்திலும் சத்தம் கேட்கிறது அனைவரையும் வெளியேற்றுங்கள் என்று சொன்னார் சபாநாயகர் அப்பாவு. இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அவரது தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.












Click it and Unblock the Notifications