போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஊதிய ஒப்பந்த விவகாரத்தில் இழுபறி நீடிப்பு- இன்றும் பேச்சுவார்த்தை!
சென்னை : அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நேற்று நடைபெற்ற 7ம் கட்ட பேச்சுவார்த்தையில், ஊதிய ஒப்பந்த காலத்தை 4 ஆண்டாக அதிகரிக்கும் அரசின் முடிவிற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனையடுத்து, இன்று மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயா்வு தொடர்பான ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். 13-ஆவது ஊதிய ஒப்பந்தம் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் ஏற்படாமல் இதுவரையில் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புதிய ஒப்பந்தம் போடுவது தொடர்பான பேச்சுவார்த்தை தள்ளிப்போனது. இதனால், கடந்த 2019 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய 14-வது ஊதிய ஒப்பந்தம், தற்போது வரை இறுதி செய்யப்படாமல் உள்ளது.

இந்நிலையில், அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கான 14- ஆவது ஊதிய ஒப்பந்தத்தின் 7-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் கோபால், நிதித்துறை இணை செயலாளர் அருண்சுந்தர் தயாளன், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லட்சுமி காந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல், தொமுச பேரவை பொதுச்செயலாளா் எம்.சண்முகம், தொமுச நிா்வாகி கி.நடராஜன், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளா் ஆா்.கமலக்கண்ணன், தலைவா் தாடி ம.ராசு, சிஐடியு தலைவா் அ.சவுந்தரராசன் உள்ளிட்ட 66 தொழிற் சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்துகொண்டனர். காலையில் தொடங்கிய பேச்சுவாா்த்தை மாலை 6 மணி வரை நீடித்தது.
ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை காலத்தை நான்கு ஆண்டுகளாக அதிகரிக்கும் அரசின் முடிவிற்கு தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததாலும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படாததாலும் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டது.
ஏற்கெனவே உள்ளபடி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என்னும் நடைமுறையை மாற்றக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்தக் கோரிக்கைகள் தொடா்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், இன்றும் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தப்பட உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications