இந்திய சட்ட வரலாற்றில்.. இப்படி நடந்ததே இல்லை.. முதல்முறை உச்ச நீதிமன்றம் போட்ட கடிவாளம்!
சென்னை: இந்திய வரலாற்றில் முதல்முறையாக வழக்கறிஞர்கள் வாதங்களை வைக்க காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது வழக்கறிஞர்கள் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று புதிய காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அனைத்து நீதிமன்ற செயல்பாடுகளுக்கும், வழக்கறிஞர்கள் வாய்மொழி வாதங்களை முடிப்பதற்கான காலக்கெடுவை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கென, ஒரு வரலாற்று நடவடிக்கையாக, முதல் முறையாக 'நிலையான செயல்பாட்டு நடைமுறை' (Standard Operating Procedure - SOP) ஒன்றை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதல்முறை இப்படி நடப்பது குறிப்பிடத்தக்கது.

வாய்மொழி வாத நேரம்
மூத்த வழக்கறிஞர்கள், வாதாடும் வழக்கறிஞர்கள் மற்றும்/அல்லது வழக்குரைஞர்கள் (advocate-on-record), தங்கள் வாய்மொழி வாத கால அட்டவணையை, விசாரணை தொடங்குவதற்கு குறைந்தது ஒரு நாளுக்கு முன்னதாகவே, ஆஜர் சீட்டு சமர்ப்பிக்கும் ஆன்லைன் போர்ட்டல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் டிசம்பர் 29 அன்று வெளியிட்ட சுற்றறிக்கை தெரிவிக்கிறது. அதாவது தாங்கள் வாதம் செய்யப்போகும் நேரத்தை அவர்கள் குறிப்பிட வேண்டும்.
அதோடு, வாதாடும் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், அவர்களது வழக்குரைஞர்கள் அல்லது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பு வழக்கறிஞர்கள் வழியாக, ஐந்து பக்கங்களுக்கு மிகாத சுருக்கமான குறிப்பு அல்லது எழுத்துப்பூர்வ மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என சுற்றறிக்கை வலியுறுத்துகிறது. இதன் நகலை எதிர் தரப்பினருக்குச் சேர்த்த பிறகு, விசாரணைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே இதைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து வெளியான உத்தரவில், வாதங்களைச் சமர்ப்பிக்கும் காலக்கெடுவை உறுதிசெய்ய, வாதாடும் வழக்கறிஞர்கள் மற்றும்/அல்லது மூத்த வழக்கறிஞர்கள், அவர்களது வழக்குரைஞர்கள் அல்லது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பு வழக்கறிஞர்கள் (ஏதேனும் இருப்பின்), எதிர் தரப்பினருக்கு நகலைச் கொடுத்த பிறகு, விசாரணை தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, ஐந்து பக்கங்களுக்கு மிகாத ஒரு சுருக்கமான குறிப்புரை / எழுத்துப்பூர்வ மனுவை தாக்கல் செய்ய வேண்டும்."
இந்த SOP-கள், திறமையான நீதிமன்ற நிர்வாகம், பணி நேரச் சம பங்கீடு மற்றும் விரைவான, முறையான நீதி நிர்வாகத்தை உறுதி செய்வதை முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளன.
வழக்கறிஞர்கள் வாதங்களை வைக்க காலக்கெடு
மாண்புமிகு இந்தியத் தலைமை நீதிபதி மற்றும் அனைத்து மாண்புமிகு நீதிபதிகளின் வழிகாட்டுதலின்படி, திறம்பட நீதிமன்ற மேலாண்மை, பணிநேரத்தை சரியாகப் பயன்படுத்துதல் மற்றும் விரைவான, முறையான நீதி நிர்வாகத்தை உறுதிசெய்யும் நோக்கில், அனைத்து வழக்குகளிலும் வாய்மொழி வாதங்களுக்கான காலக்கெடுவைப் பின்பற்றுவதற்கான ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது.
இந்திய வரலாற்றில் முதல்முறையாக வழக்கறிஞர்கள் வாதங்களை வைக்க காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது வழக்கறிஞர்கள் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று புதிய காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தாங்கள் எத்தனை நேரம் வாதம் செய்வோம் என்பதை.. விசாரணைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications