தேதி குறிச்சாச்சி.. டிச., 20ல் கொட்டப்போகும் கனமழை.. பட்டியலில் 8 மாவட்டங்கள்..உங்கள் ஊர் இருக்கா?
சென்னை: தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் மழை குறைந்துள்ளது. இந்நிலையில் தான் டிசம்பர் 20ல் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை கொட்டப்போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதோடு சென்னையின் காலநிலை என்ன என்பது பற்றிய தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் உள்ளது. கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த வாரம் வங்ககடலில் உருவான மாண்டஸ் புயல் உள்ளிட்டவற்றால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தன.
கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பெரிய அளவில் மழை இல்லை. சில இடங்களில் மட்டும் கனமழை பெய்தது.

இன்று முதல் டிசம்பர் 18 வரையிலான நிலவரம்
இந்நிலையில் தான் இன்று முதல் டிசம்பர் 20ம் தேதி வரை 5 நாளுக்கான வானிலை அப்டேட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் வழங்கி உள்ளது. அதன்படி கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் டிசம்பர் 18 வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதகிளி்ல ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 20ல் கனமழை
டிசம்பர் 19, 20ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரகை்கால் பகுதகிளில் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய உள்ளது. மேலும் டிசம்பர் 20ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது. அன்றைய தினம் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது. மேலும் அன்றைய தினம் காரைக்காலில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது.

சென்னை நிலவரம் என்ன?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை என்பது 30 முதல் 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 22 முதல் 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திஇமல் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும். தென்மேற்கு வங்ககடலில் இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் நாளை காலை வரை 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசும். தென்மேற்கு அரபிக்கட்ல பகுதியில் நாளை காலை வரை மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேக்தகதிலம் காற்று வீசும். அதன்பிறகு படிப்படியாக காற்றின் வேகம் குறையும். இதனால் மேற்கூறிய இடங்ளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தென்மண்ட வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்.
-
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
Election: இதுவரை 651 கோடி பறிமுதல்.. தமிழ்நாட்டில் ரூ.170 கோடி சிக்கியது.. தேர்தல் ஆணையம் தகவல் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்!












Click it and Unblock the Notifications