ஜல்லிக்கட்டு போட்டிக்கான தமிழக அரசின் வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு.. வீரர்களுக்கு மேஜர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023ம் ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிக்கான நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் மாடுபிடி வீரர்கள், காளைகளுடன் களத்துக்கு வரும் உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மாடு பிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்பதோடு, 2 நாளுக்கு முன்பு எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. மதுரை அவனியாபுரம் அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது.

அதேபோல் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது. இந்நிலையில் தான் ஜல்லிக்கட்டுக்கு தடைக்கோரி பீட்டா சார்பில் தொடரப்பட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு

வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு

இது ஒருபுறம் இருக்க இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தீவிரமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ஜல்லிக்கட்டு போட்டிக்கான நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை இன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதில் ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கொரோனா பரவல் அச்சம் உள்ள நிலையில் அதுசார்ந்த சாரம்சங்களின் அடிப்படையில் வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு

வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியீடு

இது ஒருபுறம் இருக்க இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தீவிரமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ஜல்லிக்கட்டு போட்டிக்கான நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை இன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதில் ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக கொரோனா பரவல் அச்சம் உள்ள நிலையில் அதுசார்ந்த சாரம்சங்களின் அடிப்படையில் வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

குழு அமைத்து கண்காணிப்பு

குழு அமைத்து கண்காணிப்பு

அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை ஒரு நாளுக்கு முன்பே உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். காளைகளுடன் வரும் 2 பேரும் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

குழு அமைத்து கண்காணிப்பு

குழு அமைத்து கண்காணிப்பு

அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை ஒரு நாளுக்கு முன்பே உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். காளைகளுடன் வரும் 2 பேரும் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மாடுபிடி வீரர்கள் கவனத்துக்கு..

மாடுபிடி வீரர்கள் கவனத்துக்கு..

மேலும் மாடுபிடி வீரர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். அதோடு வீரர்கள் போட்டிக்கு 2 நாளுக்கு முன்பு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு கொரோனா நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசின் வழிக்காட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காளைகள் விழ்த்து விடப்படும் நேரம் முதல் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மாடுபிடி வீரர்கள் கவனத்துக்கு..

மாடுபிடி வீரர்கள் கவனத்துக்கு..

மேலும் மாடுபிடி வீரர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். அதோடு வீரர்கள் போட்டிக்கு 2 நாளுக்கு முன்பு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு கொரோனா நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசின் வழிக்காட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காளைகள் விழ்த்து விடப்படும் நேரம் முதல் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு

பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு

இதுதவிர ஜல்லிக்கட்டு போட்டியை அதிகபட்சம் 300 பேர் பார்க்க அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் மொத்த இருக்கையில் பாதியளவுக்கு மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசின் வழிக்காட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது. மாநில அரசால் அனுமதித்த இடங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது. இந்த உத்தரவு மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு

பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு

இதுதவிர ஜல்லிக்கட்டு போட்டியை அதிகபட்சம் 300 பேர் பார்க்க அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் மொத்த இருக்கையில் பாதியளவுக்கு மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசின் வழிக்காட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது. மாநில அரசால் அனுமதித்த இடங்களில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது. இந்த உத்தரவு மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+