கேரளாவில் கொரோனா பாசிட்டிவ் ரேட் அதிகரிப்பு.. தமிழக எல்லையில் வாகன சோதனை, கட்டுப்பாடு தீவிரம்
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக அண்டை மாநிலமான கேரளா உடனான எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார் .
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோய்த்தொற்று குறைவடைந்து வந்த போதிலும், அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை .
இந்த நிலையில்தான் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு நோய் பரவல் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

சோதனை சாவடிகள்
இதுகுறித்து தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாடு மற்றும் கேரளா இடையேயான சுங்கச்சாவடிகளில் கூடுதலாக தீவிர சோதனைகள் நடத்தப்படுகின்றன . கேரளாவில் நோய்த்தொற்று அதிகரித்திருப்பதை அறிந்து இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

போக்குவரத்து
இப்போது தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பதிவு நடைமுறை அவசியம் இல்லை என்று தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் பொதுப் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், கேரளாவிலிருந்து எந்தவித தடைகளும் இல்லாமல் தமிழகத்துக்குள் மக்கள் வருகை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

கேரளாவில் பாசிட்டிவ் ரேட் அதிகம்
கேரளாவில் கடந்த சில நாட்களில் டெஸ்ட் நேர்மறை விகிதம் (டிபிஆர்) அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று அறிவித்தார். கேரளாவில் ஜூலை 23 ஆம் தேதி 17,518 புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன, கடந்த ஒரு நாளில் 1,28,489 மாதிரி சோதனைகள் நடத்தப்பட்டன. பாசிட்டிவ் ரேட் 13.63 சதவீதம் என்ற அளவுக்கு அங்கு அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக 132 இறப்புகள் பதிவாகியுள்ளன. அந்த மாநிலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,871 ஆக உள்ளது

தமிழ்நாடு நிலவரம்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,830 புதிய கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோர் ஒட்டுமொத்த எண்ணிக்கை 25,44,870 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24 பேர் கொரோனாவில் பலியாகினர். எனவே இறப்பு எண்ணிக்கை 33,862 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 24,816 செயலில் உள்ள கேஸ்கள் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,35,008 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, இது வரை ஆய்வு செய்யப்பட்ட மாதிரிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை 3,62,48,758 ஆக உள்ளது.
-
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கேரளாவில் மீண்டும் தலைதூக்கிய நிபா வைரஸ்.. தடுப்பூசி கூட இல்லையே.. வௌவால்கள் மூலம் பரவும் ஆபத்து!












Click it and Unblock the Notifications