நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. வேட்புமனு தாக்கல் தொடங்கியது.. கொரோனா பரவலால் கடும் கட்டுப்பாடு!
சென்னை: தமிழ்நாட்டில் நடக்க உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி நடந்து வருகிறது. 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல்
இந்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இன்று முதல் பிப்.4-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். நாளை சனிக்கிழமை வேலை நாள் என்பதால் அன்றும் வேட்புமனு தாக்கல் செய்யலாம். கொரோனா பரவலுக்கு இடையே வேட்புமனு தாக்கல் செய்ய கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்பவர்களுக்கு பல பாதுகாப்பு அறிவுரைகள் விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா விதிகள்
முககவசம், கையுறை அணிந்து மட்டுமே வேட்புமனுவை பெற வேண்டும். மாஸ்க் இல்லாமல் வந்தால் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரே நேரத்தில் நிறைய வேட்பாளர்கள் வந்தால் டோக்கன் அளிக்கப்படும். டோக்கன் அடிப்படையில் வேட்புமனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா உள்ள வேட்பாளர்கள் முன்மொழிபவர்கள் மூலம் வேட்புமனு தாக்கல் செய்ய வசதி அளிக்கப்பட்டுள்ளது.

பரிசீலனை
தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீது பிப். 5-ல் பரிசீலனை நடைபெறும். அதே சமயம் வேட்புமனுக்களை திரும்ப பெற பிப்.7 கடைசி நாள் ஆகும். இன்று காலை வேட்புமனு தொடங்கிய நிலையில் சில நகராட்சி, மாநகராட்சிகளில் வேட்புமனு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இன்னும் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக,, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

வேட்பாளர்கள் பெயர்கள்
இதற்காக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நேற்றுதான் திமுக நடத்தியது. விரைவில் திமுக வேட்பாளர்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இன்று தனி தனியாக ஆலசோனை செய்ய உள்ளன. கூட்டணி ஆலோசனைகள் முடிந்த பின் கட்சிகள் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து, வேட்பு மனு தாக்கலை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications