தமிழ்நாட்டின் தலை எழுத்தை தீர்மானிக்க போகும் 10.23 லட்சம் முதல் முறை வாக்காளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 10.23 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் இன்று ஓட்டுப் போட்டு வருகிறார்கள்.. தமிழ்நாட்டில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் தங்களுக்கான 39 எம்பிக்களை தேர்வு செய்ய வாக்களிக்க போகிறார்கள்.

தமிழகம் முழுவதும் மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள்.. இவர்களில் ஆண் வாக்காளர்கள் 3.06 கோடி. பெண் வாக்காளர்கள் 3.17 கோடியாகும். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். 3-ம் பாலினத்தவரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆகும்.

10 23 lakh first-time voters in Tamil Nadu are voting today

முதல் முறையாக வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 10.23 லட்சம் ஆகும். இதில் 4 லட்சத்து 91 ஆயிரத்து 233 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 26 ஆயிரத்து 928 பெண் வாக்காளர்களும் மற்றும் 154 பேர் 3-ம் பாலினத்தவர்கள் உள்பட ஆக மொத்தம் 9 லட்சத்து 18 ஆயிரத்து 315 பேர் வாக்களிக்கின்றனர். கடந்த ஆண்டைவிட 1 லட்சத்து 21 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக ஓட்டுப்போடுவதால் முதல்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர்களாக சேர்த்து கொள்ளப்படும் நடைமுறை இருந்து வந்தது.. ஆனால் தற்போது, தேர்தல் ஆணையம் இதனை மாற்றி அமைத்துள்ளது.

அதாவது ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய 4 மாதங்களை தகுதி ஏற்பு மாதங்களாக கொண்டு கணக்கிட்டு புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன்படி கடந்த 2022ம் ஆண்டு அக்டோபரில் 18 வயது நிறைவடைந்தவர்கள் புதிய வாக்காளர்களாக சேர்வதற்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. கடந்த 2023 ஆண்டு ஜனவரி நிலவரப்படி புதிய வாக்காளர்களாக 8 லட்சத்து 98 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் புதிதாக 1 லட்சத்து 21 ஆயிரம் வாக்காளர்கள் கடந்த ஓராண்டில் வாக்காளர்களாக பதிவு செய்தனர். இதன் காரணமாக முதல்முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 23 ஆயிரம் ஆக உயர்ந்தது. அதேநேரம் தற்போதைய நிலவரப்படி, அதாவது ஏப்ரல் 2-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 18 வயது பூர்த்தி அடைந்திருந்தவர்கள் ஓட்டு போட முடியாது. அவர்கள் வாக்களிக்க ஐந்து வருடம் காத்திருக்க வேண்டும். தங்களது 23-வது வயதில்தான் லோக்சபா தேர்தலில் ஓட்டு போட முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+