கொரோனா தாக்கினாலும் பயமில்லை மீண்ட 41,357 பேர் தரும் நம்பிக்கை
கொரோனா தாக்கினாலே உயிரிழந்து விடுவோம் என்ற பயம் வேண்டாம் கொரோனா பாதித்தவர்களில் சிகிச்சை பெற்று தமிழ்நாட்டில் 41,357 பேர் மீண்டிருக்கின்றனர்.
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 41ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் இன்று 1,358 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41,357 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு ஆளாகியிருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தினாலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருவது ஆறுதலைத் தருகிறது.
தமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. வளர்ந்த நாடுகளில் கூட கொரோனாவால் உயிர்தேசம் அதிகம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மேலும் 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு எவ்வளவு
கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 74,622ஆக உயர்ந்துள்ளது. பல மாவட்டங்களிலும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,690ஆக அதிகரித்துள்ளது.

பாதிப்பு எப்படி
வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 3,009 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 350 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 258 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 2,401 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குணமடைந்தவர்கள் அதிகம்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 41-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் இன்று 1,358 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41,357 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video

தன்னம்பிக்கை தேவை
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 55.42% ஆக உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிக அளவில் மேற்கொள்ளப்படுவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கினாலே உயிரிழந்து விடுவோம் என்று பயந்துவிடக்கூடாது. தன்னம்பிக்கையுடன் நோயை எதிர்கொண்டு சத்தான உணவுகளை சாப்பிட்டு மருத்துவர்கள் கூறும் ஆலோசனையை கடைபிடித்தாலே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விடலாம் என்று அந்த நோயில் இருந்து மீண்டுள்ள 41ஆயிரம் பேர் தரும் நம்பிக்கையாகும்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications