"கையில் இருப்பதைவிட கம்மியாதான் மக்களுக்கு பணம் தந்தாங்க" வாக்களித்து விட்டு கொளுத்தி போட்ட தமிழிசை
நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமர் ஆவார் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை: "இந்த தேர்தல் திருநாளை கொண்டாடணும்.. நான் ஓட்டு போட்டுட்டேன்.. இப்போ தூத்துக்குடி கிளம்பறேன்" என்று சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்த பிறகு தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்தார்.
இவ்வளவு நாளாக தூத்துக்குடியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன். நேற்று முன்தினம்தான் பிரச்சாரம் முடிந்தது.

வாக்கு சாவடி
இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு என்பதால் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தன் வீட்டிற்கு வந்தார். காலை 8 மணிக்கே தான் குடியிருக்கும் தொகுதியில் உள்ள வாக்கு சாவடியில் ஓட்டு போட்டார்.

தூத்துக்குடி கிளம்பறேன்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "இந்த தேர்தல் திருநாளை கொண்டாட வேண்டும். மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் குடியிருக்கும் தொகுதியிலேயே ஓட்டு போட்டுட்டேன். இப்போது தூத்துக்குடி கிளம்புகிறேன். அங்கே நிச்சயமாக வெற்றி பெறுவேன்.

வருமான வரி
இங்கேயும் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும். மோடி மீண்டும் பிரதமராக மக்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். தூத்துக்குடியில் தகவலின் அடிப்படையில்தான் வருமான வரி சோதனை நடந்தது. ஏராளமான பணப் பட்டுவாடா நடந்து உள்ளது.

குறைவான பணம்
ஆனால் என்ன கவலை என்றால் அவர்கள் வைத்திருக்கும் பணத்தை விட குறைவாகவே மக்களுக்குக் கொடுத்துள்ளனர் என்பதுதான்" என்று ஒரு போகிற போக்கில் ஒரு விஷயத்தை கொளுத்தி போட்டு விட்டு கிளம்பிவிட்டார்.

போட்டோவுக்கு போஸ்
கனிமொழி வீட்டில் நடந்த ரெய்டு குறித்த கேள்விக்குத்தான் இப்படியொரு பதிலைக் கொடுத்தார் தமிழிசை. தமிழிசையுடன் அவரது கணவர் டாக்டர் செளந்தரராஜனும் ஓட்டுப் போட வந்திருந்தார். பின்னர் தம்பதி சமேதராக இருவரும் போட்டோவுக்குப் போஸ் கொடுத்து விட்டுக் கிளம்பிச் சென்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications