அடுத்த 10 ஆண்டுகளில்.. தமிழ்நாடு முழுக்க 1,000 தடுப்பணைகள்.. பட்ஜெட்டில் பிடிஆர் முக்கிய அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் புதிய பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இன்று இ பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார். தமிழ் மொழி வளர்ச்சி, காவல்துறைக்கு நிதி ஒதுக்கீடு, காலநிலை மாற்றம், சாலை பாதுகாப்பு என்று பல்வேறு விஷயங்களுக்கு இந்த பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டது ,
முக்கியமாக தமிழ்நாட்டில் நீர் நிலைகள் குறித்தும், நதிகள் குறித்தும் முக்கிய அறிவிப்புகளை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

பட்ஜெட்
பட்ஜெட் உரையில் நீர் நிலைகள் குறித்து பேசிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், 10 ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும். குளங்கள், ஏரிகள், நதிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு பாதுகாப்படும். மேட்டூர், வைகை, பேச்சிப்பாறை அணைகளின் நீர்த்தேக்க அளவு பழைய நிலைக்கு கொண்டுவரப்படும்

மாநிலம்
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் திட்டத்தை செயல்படுத்த கேரளாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும். ஆண்டின் தொடக்கத்தில் 50 குறு நீர்ப்பாசன குளங்களை தரப்படுத்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். குளங்களை தூர் வாருவதற்கு ரூ. 111 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஜல் ஜீவன் திட்டம்
ரூ.2000 கோடியில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும். பாசன திட்டங்களுக்கு ரூ6607 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது முக்கிய ஆறுகளின் மேல், கீழ் பகுதிகளில் நிரந்தர நீர் தர கண்காணிப்பு அமைப்பு அமைக்கப்படும்.
Recommended Video

குடிநீர்
79395 குக்கிராமங்களுகளில் ஒருநபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் . எல்லோருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு ஈர நிலங்கள் பாதுகாப்பிற்கு 150 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறதும் என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications