போலீஸ்காரர்கள் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்ய மாட்டோம்.. பால் முகவர்கள் சங்கம் தடாலடி
சென்னை: பால் விநியோகம் செய்யும் முகவர்களை மிரட்டுவது, கடைகளை மூடச்சொல்வது போன்ற செயல்களில் காவல்துறையினர் ஈடுபடுவதால் தமிழகம் முழுவதும் காவல் துறையினரின் வீடுகளுக்குப் பால் வினியோகம் செய்ய மாட்டோம் என்று முடிவு செய்துள்ளதாக, பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி இதுகுறித்து அளித்துள்ள பேட்டியொன்றில் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் பால் விநியோகத்தில் சுமார் 1.5 லட்சம் பால் முகவர்கள் ஈடுபட்டு வருவதாகவும், கொரோனா போன்ற காலத்திலும் மக்களுக்குப் பால் தங்குதடையின்றிக் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தக்க பாதுகாப்புடன் அவர்கள் வேலை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இடையூறு கூடாது
அத்தியாவசிய உணவுப் பொருள் என்பதால், பால் விநியோகத்திற்கும், விற்பனைக்கும் தமிழக அரசு தடை கிடையாது என்று அறிவித்துள்ள நிலையில், பால் விநியோகத்தில் ஈடுபடும் பால் முகவர்களை வேலை செய்யவிடாமல் வாகனங்களைப் பறிமுதல் செய்வதாகவும், பால் விநியோக மையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது எனப் பல இடையூறுகளைக் காவல்துறையினர் செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தீர்வு இல்லை
இதுவரை எந்த ஒரு தீர்வும் கிடைக்காமல் இருப்பதால், நாளை முதல் காவல்துறையினர், வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்வதில்லை என்று தமிழக பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அவசரமாக முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வணிகர்கள்
சாத்தான்குளத்தில் கூடுதல் நேரம் கடை திறந்ததற்காகக் காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதில் தந்தை, மகன் இருவரும் இறந்ததாக குற்றம்சாட்டி வணிகர்கள் ஒன்றிணைந்து போராட்டங்களில் குதித்துள்ளனர். இந்த நிலைியல், பால்முகவர்களும், போலீசாரின் கெடுபிடிகளுக்கு எதிராக இணைந்துள்ளனர்.

பால் முகவர்கள்
இருப்பினும், பால் முகவர்கள் முடிவு தொடர்பாக விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. ஒரு சில போலீசாரின் செயல்களுக்கு, மொத்த போலீசாருக்கு எதிராகவும் செயல்படுவது சரி கிடையாது என்று சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்படுவதை பார்க்க முடிகிறது.
-
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications