சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அகம்பாவத்தையும், அரக்க குணத்தையும் தண்டிக்கும் பண்டிகை தான் தீபாவளி -எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும் வகையில் இந்த தீபாவளிக்கு ஏற்றப்படும் ஒளி நிலைத்திருக்கட்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அகம்பாவத்தையும், அரக்க குணத்தையும் தண்டிக்கும் பண்டிகை தான் தீபாவளி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று இன்பமுடன் வாழ தீபாவளி வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார்.

மகிழ்ச்சியும் ஒற்றுமையும் ஓங்கட்டும்! ஒன்றுபட்டு உழைப்போம்! தமிமுன் அன்சாரி தீபாவளி வாழ்த்து! மகிழ்ச்சியும் ஒற்றுமையும் ஓங்கட்டும்! ஒன்றுபட்டு உழைப்போம்! தமிமுன் அன்சாரி தீபாவளி வாழ்த்து!

 இல்லங்கள் தோறும் தீப ஒளி

இல்லங்கள் தோறும் தீப ஒளி

இல்லங்கள் தோறும் தீப ஒளி ஏற்றி, இருள் அகற்றி தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

 இருள் விலகி ஒளி பிறக்கும்

இருள் விலகி ஒளி பிறக்கும்

இந்த நாள், இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

அகம்பாவமும், அரக்க குணமும்

அகம்பாவமும், அரக்க குணமும்

தன்னலமும், அகம்பாவமும், அரக்க குணமும் கொண்டு அதிகாரம் செய்ய நினைப்போரை தர்மம் தண்டித்து, நியாயத்தையும், சமாதானத்தையும் நிலைநாட்டும் பண்டிகைதானே தீபாவளி! தமிழ் நாட்டு மக்கள், தீய சக்திகளின் ஆணவத்தை அழித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நல்லாட்சி நடைபெறும் வண்ணம் இந்த தீபாவளிக்கு ஏற்றப்படும் ஒளி நிலைத்திருக்கட்டும்.

எல்லா வளமும், நலமும்

எல்லா வளமும், நலமும்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், எனது தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

English summary
Leader of the Opposition Edappadi Palaniswami has said that the light that is lit on this Diwali should remain so that the AIADMK government can be established in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X