சென்னையில் கொரோனா சுனாமி.. மக்களே மிக, மிக கவனம் வேணும்.. சிறப்பு அதிகாரி அட்வைஸ்!
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று சுனாமிபோல் பயங்கர வேகத்தில் பரவி வருகிறது. மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.ஏ.சித்திக் தெரிவித்தார்.
Recommended Video
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் மிக அதிவேகமாக் சென்று வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16,655 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொரோனாவுக்கு மேலும் 98 உயிரிழப்புள் ஏற்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா அதிவேகம்
கொரோனாவை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. தினமும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. வார இறுதி நாள் ஊரடங்கும் போடப்பட்டுள்ளது. மேலும் தியேட்டர்கள், மால்கள், உடற்பயிற்சி, சலூன்கள் திறக்க அனுமதி இல்லை. கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சென்னையில் விஸ்வரூபம்
தமிழகத்தை பொறுத்தவரை தலைநகர் சென்னையில் தொற்று மிக மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் 4,764 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையின் அம்பத்தூர், ஆவடி, அண்ணா நகர், எழும்பூர், கிண்டி, வேளச்சேரி என அனைத்து மண்டலங்களிலும் பாதிப்பு விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

கொரோனா சுனாமி
கொரோனா தொற்று நடவடிக்கையை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள சென்னைக்கான சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.ஏ.சித்திக் ஐ.ஏ.எஸ் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னையில் கொரோனா தொற்று சுனாமிபோல் பயங்கர வேகத்தில் பரவி வருகிறது. சென்னை மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.

ஆக்சிஜன் இருப்பில் உள்ளது
மக்கள் கூட்டமாக கூடக் கூடாது. விழிப்புடன் இருக்க வேண்டும். சென்னையில் தினமும் 25,000-க்கும் மேற்பட்டோருக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் தொற்று பாதித்த 25,000 பேருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்டுகிறது. சென்னையில் போதிய ஆக்சிஜன் இருப்பில் உள்ளது. நகரில் ஆக்சிஜன் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ஏ.சித்திக் கூறினார்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications