"மீன் வாங்க போறீங்களா".. தயவுசெய்து முதல்வர் சொல்றதை கேளுங்க.. எல்லாம் உங்க நல்லதுக்குத்தான்!
இறைச்சி வாங்கும்போது கூட்டம் கூடுவதை தவிர்க்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்
சென்னை: அசைவ பிரியர்களுக்கு இன்று ஒரு மிக மிக முக்கியமான அட்வைஸை தமிழக முதல்வர் எடப்பாடி வலியுறுத்தி உள்ளார்!
எப்போது லாக்டவுன் போடப்பட்டதோ, அதற்கடுத்த ஒருசில தினங்களிலேயே சென்னை மீன் மார்க்கெட்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டது... இதுபோன்ற சமயத்தில் அதிக அளவு பாதிக்கப்பட்டது அசைவ பிரியர்கள்தான்.. ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் கறிகடைகளில் கூட்டம் கூடியதே இதற்கு சாட்சி.

இந்த சமயங்களில் கல்யாணம் உட்பட விழாக்களுக்கு தமிழக அரசு அனுமதி தந்தாலும், அசைவம் இன்றி எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த முடியாத சூழலும் ஏற்பட்டது.. எனினும், இவர்களுக்கும், அசைவ பிரியர்களுக்கும் பாதிப்பும் இல்லாமல் மீன், கறி மார்க்கெட்டுகள் திறக்கப்பட்டன.
ஆனால் சென்னை மார்க்கெட்களில் மக்கள் முட்டி மோதி கொண்டு இறைச்சியை வாங்கினர். ஏற்கனவே தொற்று அதிகமாக இருந்த சென்னையில் , இந்த கூட்டத்தை பார்த்ததும் மறுபடியும் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.. இதனால் ஷாக் ஆன அசைவ பிரியர்களுக்கு வாய்த்தது என்னவோ முட்டையும், கருவாடும்தான்!
சின்ன சின்ன மளிகை கடைகளை கூட மிச்சம் வைக்காமல் கருவாடு வாங்கினர் அசைவ பிரியர்கள்.. கறி கடைகள்தான் மூடப்பட்டது என்றால், காசிமேடு மீன் பிடி சந்தையிலும், மீன்கள் சில்லறை விற்பனைக்கு கிடையாது என்று மாநகராட்சி தரப்பில் சொல்லப்பட்டது. இந்த காசிமேடுதான் பெரிய மீன் சந்தையாகும்.. அதனால் அடிக்கடி அங்கு ஆய்வும் நடத்தப்பட்டது. மாஸ்க், சமூக இடைவெளியுடன் மக்களும் மீன் வாங்கி கொண்டு போனார்கள்.
இந்நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, மீன் இறைச்சி வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக போவதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக, காசிமேடு துறைமுகத்தில் தனி மனித இடைவெளி பின்பற்றப்படுவதில்லை, முக கவசம் அணிவதில்லை... ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி வாங்க கூட்டமாக குவிகின்றனர்.. அப்போது விதிகள் பின்பற்றப்பட வேண்டும்... ஞாயிறுதோறும் இறைச்சி வாங்க குவியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
ஆக, மறுபடியும் கடைகளை மூடுவதும், மூடாததும் அசைவப்பிரியர்கள் கையில்தான் உள்ளது!
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications