Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

40 குண்டு.. வெட்டப்பட்ட தமிழக மீனவர் குடல்! இந்திய கடற்படையால் சுடப்பட்டவர்களிடம் விசாரித்த திருமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கடற்படையால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு படுகாயமடைந்த தமிழக மீனவர்களின் உறவினர்களிடம் நலம் விசாரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள், காரைக்காலைச் சேர்ந்த 3 மீனவர்கள் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஐ.என்.எஸ் கப்பலில் பாதுகாப்புப் பணியிலிருந்த இந்தியக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் வீரவேல் என்ற மீனவர் மீது குண்டு பாய்ந்து, அவர் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

கடற்படை விளக்கம்

கடற்படை விளக்கம்

இதுகுறித்து இந்திய கடற்படை அளித்துள்ள விளக்கத்தில் இந்தியா - இலங்கை சர்வதேச கடல் எல்லையில், சந்தேகத்திற்குரிய படகு பல முறை எச்சரித்தும் நிற்காமல் சென்றதாகவும், வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் படகை நிறுத்தை வைக்க வேண்டும் என்பதற்காகவே துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் தெரிவித்து இருக்கிறது.

 திருமாவளவன்

திருமாவளவன்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், "இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் வயிறு மற்றும் தொடைப் பகுதிகளில் குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீனவர் வீரவேல் உடல்நிலை குறித்து அவரது மனைவி மதிமதி, அவரது அண்ணன் ஆகியோரைத் தொடர்புகொண்டு விசாரித்தேன்.

 குடற்பகுதி வெட்டியெடுப்பு

குடற்பகுதி வெட்டியெடுப்பு

அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரிடமும் பேசினேன். வயிற்றிலிருந்த குண்டு அப்புறப்படுத்தப்பட்டதுடன் சேதமடைந்த குடற்பகுதியும் வெட்டியெடுக்கப்பட்டுவிட்டது என்பதையும் விளக்கினார். அவரைக் காப்பாற்ற அவருக்கு மேலும் உயர் சிகிச்சையளிக்க அரசு அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்

 40 குண்டுகள்

40 குண்டுகள்

இது குறித்து மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். இந்திய கடற்படையினர் சுட்டதில் மீன்பிடி படகில் சுமார் 40 குண்டுகள் பாய்ந்துள்ளதாகத் தெரிகிறது. படகிலிருந்த 9 மீனவர்களைப் பிடித்து மூர்க்கமாகத் தாக்கியுள்ளனர்.
இதனை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+