சென்னையில் மழை.. பணிகள் துரிதமாக நடக்கிறதா?. பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் விசிட்
சென்னை: சென்னையில் கடந்த மாதம் பெய்த கனமழை பாதிப்பின் சுவடே இன்னும் அழியாத நிலையில் சென்னைவாசிகளை விடாது கருப்பு என்பதுபோல் மழை துரத்தி வருகிறது. சென்னையின் நகர், புறநகர் பகுதிகளில் 8 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை வெளுத்தெடுத்தது.
Recommended Video
கிண்டி, மயிலாப்பூர், எழும்பூர், மந்தைவெளி, மீனம்பாக்கம், நந்தனம் என நகரின் முக்கியமான பகுதிகளிலும், ஆவடி, அம்பத்தூர் என புறநகர் பகுதியிலும் மழை தொடர்ந்து கொட்டியது.

மழையில் சிக்கி திண்டாடும் சென்னை
இதனால் சென்னை மீண்டும் வெள்ளத்தில் மிதக்க தொடங்கியுள்ளது. சென்னை சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. தாழ்வான இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில பகுதிகளில் வீடுகளின் உள்ளே வெள்ளநீர் புகுந்தது. வெள்ளம் சூழ்ந்து விட்டதால் பல்வேறு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

நிலைமை மோசம்
சென்னையில் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ஒட்டுமொத்த சென்னையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முக்கிய சாலைகளில் பல கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சென்னை மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொல்லும் அளவுக்கு சென்னையின் நிலைமை மோசமாக உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு
சென்னையில் சாலைகளில், குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு நிலவரம், மழைநீரை அகற்றும் பணி குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

பணிகளை முடுக்கி விட்டார்
பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் மக்கள் அளித்த புகார்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். மேலும், மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மழைநீர் அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை விரைவாக முடுக்கி விடும்படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
சென்னையில் மழை பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் எடுத்துக் கூறினார்கள்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications