Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'தமிழக ஆளுநர் போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார்'.. இ.கம்யூனிஸ்ட் பரபரப்பு குற்றச்சாட்டு.. முழு விவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னிச்சையாக செயல்பட்டு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு கூட்டங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை கலந்து கொள்ள வேண்டும் என்ற கருத்து கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முத்தரசன் கூறியதாவது:- தோழமை கட்சியாக இருந்தாலும் தமிழக அரசு தவறு செய்தால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்துகிறது. கூட்டணியை முறித்துக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

அரசாணை இல்லை

அரசாணை இல்லை

தமிழகத்தில் அதிக அளவு பெய்த பருவமழை காரணமாக அதிக பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது இதனை தமிழக அமைச்சர்கள் மட்டுமல்லாது மத்திய குழுவும் ஆய்வு செய்துள்ளது. ஆனால் அந்த குழு என்ன அறிக்கை அளித்துள்ளது என்று இதுவரை வெளியிடப்படவில்லை மேலும் மத்திய அரசு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை
தமிழக அரசு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது ஆனால் அரசாணை எதுவும் தெரிவிக்கப்படவில்லை நிவாரணம் வழங்கவில்லை.

ஆளுநர்கள் செயல்பாடு

ஆளுநர்கள் செயல்பாடு

தமிழக அரசு அறிவித்த இழப்பீடு தொகை என்பது விவசாயிகளுக்கு குறைவான இருக்கும் ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் தவிர மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்பட்டு வருகின்றனர். இது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல.

கண்டிக்கத்தக்கது

கண்டிக்கத்தக்கது

தமிழகத்தில் ஒப்பந்தங்களில் 60 சதவீதம் கமிஷன் ஆகவும் 40 சதவீத பணிகள் தான் நடைபெற்று வருகிறது அதுவும் பணிகள் நடப்பதற்கு முன்பாகவே கமிஷன் தொகை முன்கூட்டியே வாங்கப்படுகிறது. இது எல்லா ஆட்சிகளிலும் தொடர்கிறது. மத்திய அரசு கூட்டங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை கலந்து கொள்ள வேண்டும் என்ற கருத்து கண்டிக்கத்தக்கது.

தொலைநோக்குத் திட்டம் எங்கே?

தொலைநோக்குத் திட்டம் எங்கே?

தன்னிச்சையாக செயல்படக் கூடிய தேர்தல் ஆணையம் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் மறைமுகமாக கொண்டுவரப்பட்டு விட்டது. தமிழகத்தில் தொலைநோக்குத் திட்டம் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை வரும் கூட்டத்தொடரில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+