உள்ளாட்சி தேர்தல் முடிவு.. கட்சி நிர்வாகிகளிடம் சீறிய ராமதாஸ்.. கூட்டணி குறித்து புதிய முடிவு!
சென்னை: தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதில் பதிவான வாக்குகள் கடந்த 12-ம் தேதி எண்ணப்பட்டன. சட்டமன்ற தேர்தலைபோல் உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க அமோக வெற்றி பெற்றது. திமுகவுக்கு டப் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பின்னடைவை சந்தித்தது.

பா.ம.க.வின் நிலை
இதேபோல் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுவதாக அறிவித்த பா.ம.க. 47-க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளை கைப்பற்றி இருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பா.ம.க எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடந்தது. கட்சி தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமதாஸ் கோபம்
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், இதில் பா.ம.க.வின் செயல்பாடுகள், எதிர்காலத்தில் பா.ம.க.வின் செயல்திட்டம், கூட்டணி நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. அப்போது உள்ளாட்சி தேர்தல் முடிவால் மிகுந்த கோபம் அடைந்த ராமதாஸ் பாமக நிர்வாகிகளை லெப்ட்-ரைட் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.

விசுவாசமாக வேலை செய்யவில்லை
கட்சிக்கு சிலர் விசுவாசமாக வேலை செய்யாததே தோல்விக்கு காரணம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
தனது 41 ஆண்டு கால உழைப்புக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
இனி வேறு யாருடனும் கூட்டணி கிடையாது. கடைசி நேரத்தில் முடிவில் மாற்றம் இருக்காது. கட்சி மாறுவோர் இப்போதே சென்று விடுங்கள். இருப்பவர்கள் ஒற்றுமையாக வேலை பார்க்க வேண்டும் என்று ராமதாஸ் கோபத்துடன் பேசியுள்ளார்.

கோட்டையில் அன்புமணி ராமதாஸ்
தீபாவளிக்கு பிறகு பா.ம.க. நிர்வாகிகள் ஊர் ஊராக சென்று மக்களை சந்திக்க வேண்டும் என்று மக்கள் நிச்சயம் மனம் மாறுவார்கள். மக்களின் மனதை மாற்றி என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் அன்புமணி ராமதாஸை உட்கார வைக்க வேண்டும் என்று நிர்வாகிகளிடம் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications