அட, நீங்க வேற.. தேர்தல் முறைகேட்டை திசை திருப்ப ஹிஜாப்பை பெருசுபடுத்துறாங்க.. சொல்வது அண்ணாமலை
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைபடி நடைபெற்றதா என்ற கேள்வி தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரையில் ஹிஜாப் அணிந்த பெண்ணை பாஜக பிரமுகர் வெளியேற சொன்னதாக சர்ச்சை எழுந்தது. இதை அண்ணாமலை மறுத்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார் பாஜக தலைவர் அண்ணாமலை. இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

பணபலம்
செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை கூறூகையில், ''இந்த தேர்தலில் பண பலம், அராஜகம், குண்டர்களை வைத்து அட்டூழியங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் இதையெல்லாம் வேடிக்கை பார்த்தது. இதை திசை திருப்புவதற்காக மதுரை மேலூர் வாக்குச் சாவடியில் வாக்காளரின் முகத்தை காட்ட சொன்ன பாஜக பூத் ஏஜெண்ட் மீது ஹிஜாப் புகார் ஆளும் கட்சி, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இப்போது அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மதுரை
மதுரை ஹிஜாப் பிரச்சனை திரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை பாஜக வரவேற்கிறது. கடவுச் சீட்டுக்கு புகைப்படம் எடுக்க முகம் காட்ட அனுமதிக்குப்போது வாக்களிக்கும்போது முக அடையாளத்திற்காக புர்காவை அகற்ற கூடாதா என உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஒருமுறை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையில் பாஜக ஏஜெண்ட் முகம் காட்ட சொன்னார். ஹிஜாப்பை அகற்ற சொல்லவில்லை.

ஆளும் கட்சி
இந்தத் தேர்தலில் ஆளும் கட்சியினரின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வீடு வீடாக பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட வெறுப்பால் பொதுமக்கள் வாக்களிக்க வரவில்லை. இதனால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலை விட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 14சதவிகிதம் அளவிற்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளது'' என்றார்.

தேர்தல்
கடந்த சனிக்கிழமை அன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்னை அண்ணாநகரில் வாக்களிக்க வந்தபோது, அவரின் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக புகாரளித்தார் அண்ணாமலை. ஆனால் அமைச்சர் ஓட்டை யாரும் போடவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்பிறகே அமைச்சர் தன்னுடைய வாக்கை செலுத்தினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications