Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட, நீங்க வேற.. தேர்தல் முறைகேட்டை திசை திருப்ப ஹிஜாப்பை பெருசுபடுத்துறாங்க.. சொல்வது அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைபடி நடைபெற்றதா என்ற கேள்வி தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரையில் ஹிஜாப் அணிந்த பெண்ணை பாஜக பிரமுகர் வெளியேற சொன்னதாக சர்ச்சை எழுந்தது. இதை அண்ணாமலை மறுத்துள்ளார்.

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார் பாஜக தலைவர் அண்ணாமலை. இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

பணபலம்

பணபலம்

செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை கூறூகையில், ''இந்த தேர்தலில் பண பலம், அராஜகம், குண்டர்களை வைத்து அட்டூழியங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் இதையெல்லாம் வேடிக்கை பார்த்தது. இதை திசை திருப்புவதற்காக மதுரை மேலூர் வாக்குச் சாவடியில் வாக்காளரின் முகத்தை காட்ட சொன்ன பாஜக பூத் ஏஜெண்ட் மீது ஹிஜாப் புகார் ஆளும் கட்சி, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இப்போது அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மதுரை

மதுரை


மதுரை ஹிஜாப் பிரச்சனை திரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை பாஜக வரவேற்கிறது. கடவுச் சீட்டுக்கு புகைப்படம் எடுக்க முகம் காட்ட அனுமதிக்குப்போது வாக்களிக்கும்போது முக அடையாளத்திற்காக புர்காவை அகற்ற கூடாதா என உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஒருமுறை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையில் பாஜக ஏஜெண்ட் முகம் காட்ட சொன்னார். ஹிஜாப்பை அகற்ற சொல்லவில்லை.

 ஆளும் கட்சி

ஆளும் கட்சி

இந்தத் தேர்தலில் ஆளும் கட்சியினரின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வீடு வீடாக பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட வெறுப்பால் பொதுமக்கள் வாக்களிக்க வரவில்லை. இதனால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலை விட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 14சதவிகிதம் அளவிற்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளது'' என்றார்.

தேர்தல்

தேர்தல்

கடந்த சனிக்கிழமை அன்று நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது மத்திய அமைச்சர் எல்.முருகன் சென்னை அண்ணாநகரில் வாக்களிக்க வந்தபோது, அவரின் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக புகாரளித்தார் அண்ணாமலை. ஆனால் அமைச்சர் ஓட்டை யாரும் போடவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்பிறகே அமைச்சர் தன்னுடைய வாக்கை செலுத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+