Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேரூராட்சிகளிலும் திமுக ஆதிக்கம்.. அதிமுக இரண்டாம் இடம்.. அடுத்தடுத்த இடங்களில் சர்ப்ரைஸ் முடிவுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடந்து முடிந்துள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிகமாக இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது திமுக.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. 138 நகராட்சிகளில் திமுக132 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது.

பேரூராட்சி

பேரூராட்சி

மொத்தமுள்ள 489 பேரூராட்சிகளில் 7605 பதவிகளுக்கான ஓட்டு எண்ணிக்கையில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 4259 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 1023 இடங்களிலும், இதர கட்சிகள் 894 இடங்களிலும், பாஜக 216 இடங்களிலும், அமமுக 62 இடங்களிலும், பாமக 57 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை

தமிழகம் முழுவதும் உள்ள 489 பேரூராட்சிகளில் தற்போது வரை திமுக அதிக பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் இதர கட்சிகளும், நான்காவது இடத்தில் பாஜகவும் இருக்கின்றது. இந்த தேர்தலில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஒரு பேரூராட்சியிலும் வெற்றி பெறவில்லை.

திமுக‌

திமுக‌

பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக 4259 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல மாவட்டங்களின் பேரூராட்சிகளை மொத்தமாக தட்டித் தூக்கியிருக்கிறது திமுக. திருச்சி, விருதுநகர், திருவாரூர், வேலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், விழுப்புரம் என பல மாவட்ட பேரூராட்சியை மொத்தமாக கைப்பற்றியுள்ளது திமுக. அதிமுக இரண்டாவதாக பேரூராட்சிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், பல இடங்களில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த தோலிய் எதிர்பார்த்த ஒன்று என அதிமுக தெரிவித்துள்ளது.

பாஜக‌

பாஜக‌

பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் பாஜக 216 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக அதிக பேரூராட்சி வார்டுகளில் வென்றிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியில் பேரூராட்சியை பாஜக கைப்பற்றி வெற்றி வாகை சூடியுள்ளது. மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் இருவரும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஒருவரும் வென்றிருக்கின்றது. கன்னியாகுமரியில் திமுக, அதிமுக கட்சிகளை வாஷ் அவுட் செய்துள்ளது. ஆனால் மற்ற மாவட்டங்களில் பாஜக தூக்கியடிக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+