நர்ஸ் போராட்டம், ஆசிரியர் போராட்டம் எல்லாம்.. சைடுல போகட்டும்! ஜனநாயகனில் பிஸியான விஜய்.. அடப்போங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டில் பிசியாக இருக்கிறார். படத்தின் ப்ரோமோஷனில் பிஸியான அவர்.. தமிழ்நாட்டில் தினம் தினம் நடக்கும் பல முக்கிய விஷயங்களை கண்டுகொள்ளாமல் ஒதுங்கி உள்ளார்.

அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த 18 ஆம் தேதி போராட்டத்தை தொடங்கினர்.

TVK Vijay busy with Jananayagan promotions not focusing much on Tamil Nadu political issues

நர்ஸ்கள் போராட்டம் - தவெக காணவில்லை

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதில் சுமூக தீர்வு காணப்படவில்லை. பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சில கோரிக்கைகளை ஏற்று அறிவிப்பினை வெளியிட்டார். அதனையும் அவர்கள் ஏற்கவில்லை. இதனால் சென்னையில் இருந்து அவர்களை போலீசார் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கூடுவாஞ்சேரி நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் செவிலியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்று நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 500-க்கும் மேற்பட்ட நர்சுகள் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் அவர்களை போலீசார் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

10 அரசு பஸ்களில் ஏற்றப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். திருச்சி, மதுரைக்கு அழைத்து செல்லப்பட்ட போது அவர்கள் வழியிலேயே சிலர் இறங்கினார்கள். இந்த விவகாரத்தில் விஜய் எந்த கருத்தும் சொல்லவில்லை. விஜய் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. விஜய் எதுவும் பேசவில்லை. ஒரு வீடியோ கூட வெளியிடவில்லை. ஜனநாயகன் ப்ரோமோஷனில் பிஸியான விஜய்.. இதை பற்றி கண்டுகொள்ளவே இல்லை.

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் போராட்டம்

கடந்த டிசம்பர் 22ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கலந்தாய்வுக் கூடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் முன்வைத்த பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடந்தது. ஆனால் இந்த கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.

இதையடுத்து தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களை அறிவித்து உள்ளன. சென்னை எழிலகத்தில் 4-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எழிலகத்தை முற்றுகையிட முயன்றதால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடை நிலை ஆசிரியர்கள் சென்னையில் 4-வது நாளாக போராட்டம் செய்து வருகின்றனர். திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311 ஐ நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் செய்து வருகின்றனர். ஆனால் 4 நாட்களாக போராட்டம் நடந்தும் இந்த விவகாரத்தில் விஜய் எந்த கருத்தும் சொல்லவில்லை. விஜய் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை.

விஜய் எதுவும் பேசவில்லை. ஒரு வீடியோ கூட வெளியிடவில்லை. இதிலும் கருத்து சொல்லாமல் ஜனநாயகன் ப்ரோமோஷனில் பிஸியான விஜய்.. தமிழ்நாட்டில் தினம் தினம் நடக்கும் பல முக்கிய விஷயங்களை கண்டுகொள்ளாமல் ஒதுங்கி உள்ளார்.

விஜயின் கடைசி படமாக இது இருந்தாலும் இன்னொரு பக்கம் அரசியலிலும் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். இளம் அரசியல் தலைவர் ஒரு seasoned அரசியல்வாதியாக இருப்பார் அதை செய்யாமல் சீசனுக்கு சீசன் மட்டும் அரசியல் செய்யும் தலைவராக உருவெடுத்து உள்ளார். ஏற்கனவே திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி விஜய் பேசவில்லை, வடஇந்தியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையில் நடக்கும் தாக்குதல் பற்றி பேசவில்லை, ஆணவக்கொலைகள் பற்றி பேசவில்லை.. இப்படி தொடர்ந்து ஒதுங்கியே இருக்கும் விஜய்.. எப்போது உண்மையில் தீவிர அரசியலில் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+