மறக்கமுடியுமா 2020 : இந்த முழு நாடும் கொரோனாவிற்கு எதிராக போராடுகிறது... பலகோடி பேர் கேட்ட வசனம்
செல்போனில் கால் செய்தாலே லொக் லொக் என்ற இருமலுடன் தொடங்கி அதை தொடர்ந்து ஒளிபரப்பான காலர் ட்யூனையும் பலரும் கேட்டிருப்போம். 2020ல் பல கோடி பேர் அதிகம் கேட்ட காலர் ட்யூனாகி விட்டது.
சென்னை: செல்போனில் கால் செய்தால் முன்பெல்லாம் காதுக்கு இனிமையாக பாட்டு ஒலிக்கும். அது நல்ல பாட்டாக இருந்தால் மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். காலர்ட்யூன் வைப்பவர்களின் மனநிலையைப் பொறுத்து அது மாறும். கொரோனாவிற்கு பின்னர் லொக் லொக் இருமலும் நாடு முழுவதும் கொரோனா உடன் போராடுகிறது என்ற வசனமும்தான் கேட்கிறது. 2020ஆம் ஆண்டில் அதிகம் பேரால் கேட்கப்பட்ட காலர் ட்யூனாகி விட்டது இந்த கொரோனா வசனம்.
2020ஆம் ஆண்டு பலருக்கும் மறக்க முடியாத ஆண்டாக அமைந்து விட்டது. வேலைக்காகவும், படிப்புக்காகவும் சொந்த ஊரை விட்டும் சொந்தங்களை விட்டும் வெளியூர் சென்றவர்களை சோதனைக்கு ஆளாக்கி விட்டது. கொரோனா பரவல் காரணமாக லாக் டவுன் அறிவிக்கப்பட்டு தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்டன. வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறைக்கு பலரும் மாறினர்.

பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றது. விடுதிகளில் தங்கியிருந்த பல மாணவர்கள் வீடு திரும்பினர். எத்தனையோ மாற்றங்கள் 2020ஆம் ஆண்டு நடந்தாலும் நாடு முழுவதும் கோவிட் 19க்கான விழிப்புணர்வு காலர்ட்யூன் வசனம் பல மொழிகளில் ஒலிபரப்பானது.
இன்று முழு நாடும் கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 உடன் போராடுகிறது. ஆனால், நினைவில் கொள்ளுங்கள்... நாம் நோயுடன் போராட வேண்டுமே தவிர நோயாளிகளுடன் அல்ல. அவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டாதீர்கள். அவர்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்ற வசனத்தை தினமும் 10க்கும் மேற்பட்ட முறையாவது அலைபேசி வழியாகக் கேட்க நேரிட்டிருக்கும்.
மார்ச் மாதம் தொடங்கிய இந்த காலர் டியூனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் சில மாற்றங்கள் செய்யப்பட்டது என்றாலும் 2020ஆம் ஆண்டு இறுதி வரைக்குமே நாட்டு மக்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர். ரயில் பெட்டிகள் மருத்துவ வார்டுகளாக மாறின.
கொரோனா என்னும் கொள்ளை நோய்க்கு ஒன்றரை லட்சம் பேர் இந்தியாவில் உயிரிழந்து உள்ளன. பல கோடீஸ்வரர்கள் கொரோனாவிற்கு பலியாகினர். ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் தொட்டுப்பார்த்தது கொரோனா. இந்த உலகத்தில் வாழ தகுதி படைத்தவர்கள் குணமடைந்தனர். ஆயுள் முடிந்தவர்களை கொரோனா அழைத்துக்கொண்டு போய்விட்டது.
முன்பு சாதாரண கொரோனாவாக இருந்து இப்போது உருமாறிய கொரோனாவாக அப்கிரேட் ஆகியுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. பிறக்கப்போகும் புத்தாண்டாவது நோய் நொடிகள் அற்ற ஆரோக்கியமான புத்தாண்டாக அமைய வேண்டும் என்பதே பலரது வேண்டுதலாகும். இந்த 2020ஆம் ஆண்டு பல தலைமுறைக்கும் நினைவு வைத்து பேசக்கூடிய மறக்கமுடியாத ஆண்டாக அமைந்து விட்டது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications