மகளிர் உரிமை தொகை ரூ.1000.. உங்களுடன் ஸ்டாலின் முகாமில்.. நடக்கும் தரமான சம்பவம்.. என்னாச்சு?
சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட முகாம்களில் இதுவரை சுமார் 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. அந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில், மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோரி மட்டும் 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
மனுக்கள் பெறப்பட்ட விவரங்கள் அனைத்தும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த தகவல்களை அரசு வெளியிட்டுள்ளது. அடுத்த 45 நாட்களுக்குள் இந்த திட்டத்தின் கீழ் மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மகளிருக்கான உரிமைத் தொகை திட்டத்திற்கு வெறும் ஐந்து ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்களில், மகளிருக்கான உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு வெறும் பத்து நிமிடங்களில் அனைத்து பணிகளும் முடித்துத் தரப்படுகின்றன. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த முகாம்களில் விண்ணப்பிக்க ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, கைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு பாஸ்புக் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானவை. இந்த ஆவணங்களைச் சமர்ப்பித்து, எளிய முறையில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதலாக வேறு ஆவணங்கள் இதற்கு கேட்கப்படவில்லை.
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம்
மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதி இருந்தும் கிடைக்கப் பெறாதவர்கள், தங்கள் பகுதியில் நடைபெறும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தகுதியான அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இந்தத் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்த உறுதிமொழியினை அளித்துள்ளார்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு வார்டிலும் அக்டோபர் மாதம் வரை இரண்டு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை 109 முகாம்கள் செயல்படும். இந்த முகாம்களின் மூலம் அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடையும் என்றும், உரிமைத் தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற பெயரில் நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் இந்த முகாம்களுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
முகாமிற்கு வந்த பெண்கள் சிலர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். "நாங்கள் இங்கு வந்தவுடன், மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தை அவர்களே கொடுத்து, எங்களுக்காக அதை நிரப்புகிறார்கள். மேலும், எங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதையும் அதிகாரிகள் உடனடியாகத் தெரிவிப்பதால், வேலைகள் சுலபமாக முடிந்துவிடுகின்றன," என்று அவர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications