சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பள்ளி மாணவியுடன் காதல்..அதிகாலையில் கட்டான வீடியோ கால்! விஜய் மக்கள் நிர்வாகி எடுத்த பகீர் முடிவு!

Google Oneindia Tamil News

சென்னை : சென்னை அருகே தாம்பரத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், பள்ளி சிறுமியான காதலியுடன் வீடியோ காலில் பேசிய போது போனை கட் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாம்பரம், கடப்பேரி அருகே உள்ள புலிகொரடு பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி. லாரி டிரைவராக இருக்கும் இவர் தாம்பரம் மேற்கு பகுதி 32வது வார்டு விஜய் மக்கள் இயக்க தலைவராக இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

திருமணம் ஆகாத இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது தாய் சின்னமாவிடம் மது போதையில் சண்டை போட்டு கொண்டு தாம்பரம் - திருநீர்மலை சாலையில் அற்புதம் நகர் பகுதியில் தன்னுடன் வேலை செய்யும் சக லாரி டிரைவர்கள் தங்கும் அறையில் தங்கி வந்துள்ளார்.

விஜய் ரசிகர்

விஜய் ரசிகர்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய் பனையூரில் நடந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அது முடியாததால் வாரிசு படம் வெளியாவதையொட்டி போஸ்டர்கள் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் தான் தங்கியிருந்த அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

திடீர் தற்கொலை

திடீர் தற்கொலை

தொடர்ந்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் கருப்பசாமியின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது தெரியவந்தது. அதாவது வீடியோ கால் பிரச்சனையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறி இருக்கின்றனர். இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

 பள்ளி மாணவி

பள்ளி மாணவி

கருப்புசாமி காதலித்த பள்ளி மாணவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். தினமும் இரவு நேரங்களில் கருப்புசாமி அவருடன் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசுவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் அதிகாலை மது போதையில் இருந்த கருப்புசாமி தான் காதலித்து வந்த பள்ளி மாணவியுடன் செல்போனில் வீடியோ காலில் பேசி வந்துள்ளார். அப்போது இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என அவர் கேட்டதற்கு பள்ளி மாணவி தான் படித்து முடித்த பின்னர் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

விசாரணை

விசாரணை

பின்னர் மாணவியின் தாய் வந்துவிட்டதால் அவர் இணைப்பை துண்டித்ததாகவும், பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் கருப்புசாமிக்கு தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை எடுக்காததால் இது குறித்து கருப்புசாமியின் தாய் மற்றும் சகோதரியிடம் பள்ளி மாணவி தொடர்பு கொண்டு கருப்புசாமி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்ததாக கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கருப்புசாமியின் தாய் சின்னம்மா அவர் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்த போது அங்கு புடவையால் தூக்கிட்டு கருப்புசாமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாம்பரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

English summary
While the Vijay makkal iyakkam executive committed suicide by hanging himself in Tambaram near Chennai, it has been reported that he committed suicide out of despondency after cutting the phone while talking to his school girl girlfriend on video call.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X