"நான் ரெடி".. ரஜினியிடம் ஆளுநர் ரவி சொன்னது என்ன? பின்னால் இருந்து இயக்க போகும் தலை! நோட் பண்ணீங்களா
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த பின் அளித்த பேட்டியில் பல்வேறு அரசியல் ஒளிந்து இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அவர் பேட்டியில் சொன்ன விஷயங்களில் அரசியல் ஒளிந்து இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
தமிழ்நாடு அரசியலில் கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நுழைவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த். 2021 சட்டசபை தேர்தலுக்கு முன் 2 வருடங்களாக இதோ வருகிறேன்.. அதோ வருகிறேன் என்று ரஜினிகாந்த் கூறி வந்தார்.
ஆனால் கடைசி வரை அரசியலுக்கு வராமலே ஒதுங்கிக்கொண்டார். முதலில் ரஜினிதான் முதல்வர் வேட்பாளர் என்று கூறப்பட்டது.
பின்னர் கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு ஒரு தலைவர் என்று ரஜினிகாந்த் கூறி வந்தார். அதன்பின் உடல்நிலை காரணமாக ரஜினிகாந்த் சிகிச்சை பெற வேண்டி இருந்தது.

ரஜினிகாந்த்
உடல்நிலை சரியாகி மீண்டும் வந்த ரஜினிகாந்த் "அண்ணாத்தே" போதும் " அரசியல்" வேண்டாம் என்று மொத்தமாக ஒதுங்கிக்கொண்டார். அரசியலுக்குள் வராமலே அரசியலில் இருந்தே ஒதுங்கி இருக்க போகிறேன் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில்தான் இத்தனை நாட்கள் கழித்து மீண்டும் தமிழ்நாடு அரசியலில் ரஜினிகாந்த் லைம் லைட்டிற்கு வந்துள்ளார். இன்று அவர் ஆளுநர் ரவியை சந்தித்துதான் இந்த விவாதங்களுக்கு காரணம்.

அரசியல்
இன்று ஆளுநரை சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் ரஜினிகாந்த் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தவர்.. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இருந்தாலும் இதில் அரசியல் பேசினோம். ஆனால் அதை பற்றி உங்களிடம் சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் இருக்கும் ஆன்மீக உணர்வு ஆளுநர் ரவிக்கு பிடித்து இருக்கிறது. . தமிழ்நாட்டின் நன்மைக்காக நான் என்ன செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.

ஆளுநர் சந்திப்பு
அரசியல் பற்றிய திட்டம் என்னிடம் எதுவும் இல்லை என்று ரஜினிகாந்த் கூறினார். இதில் ரஜினிகாந்த் மறைமுகமாக இரண்டு விஷயங்களை சொன்னதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். ரஜினியுடன் கடந்த காலங்களில் நெருக்கமாக பணியாற்றிய சிலர் இதை பற்றி நம்மிடம் பேசுகையில், ரஜினி சொன்னதில் அரசியலுக்கு வர மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரசியல் பேசினோம் என்றும் சொல்கிறார்.

அரசியலுக்கு வராதவர்
அரசியலுக்கு வராதவர் ஏன் அரசியல் பேச வேண்டும்? பெரும்பாலும் இதன் அர்த்தம் ரஜினியின் ஆதரவை பாஜக பெறும் என்பதாக இருக்கலாம். அதாவது ரஜினி நேரடியாக அரசியலுக்கு வராமல் பாஜகவிற்கு பின்னால் இருந்து சப்போர்ட்டாக இருக்கலாம். பாஜக பல மாநிலங்களில் இந்த அரசியலை செய்கிறது. நேரடியாக சிலரை இறக்காமல், பின்னால் இருந்து கட்சிக்காக அவர்களை பயன்படுத்தும். அதன்படியே ரஜினியை பாஜக பயன்படுத்த போகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு நன்மை
அதோடு தமிழ்நாடு தமிழ்நாட்டின் நன்மைக்காக நான் என்ன செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று ரஜினிகாந்திடம் ஆளுநர் தெரிவித்து இருக்கிறார். நன்மை செய்ய ரெடி என்று ஆளுநர் கூறியது ஏன்? இதன் உண்மையான அர்த்தம் என்ன? அரசியல் ரீதியான மாற்றங்களை மாற்றங்களை இது குறிக்கிறதோ என்றும் ரஜினியுடன் கடந்த காலங்களில் நெருக்கமாக பணியாற்றிய சிலர் நம்மிடம் தெரிவிக்கிறார்கள். சமீபத்தில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் பேசினார்.

ஆன்மிகம்
இந்த நிகழ்ச்சியில் முற்றும் துறந்தவர் போல ரஜினிகாந்த் பேசினார். மக்கள் பட கூடிய கஷ்டம் தொடங்கி ஞானம் வரை பல விஷயங்களை பேசினார். ஆனால் அதே ரஜினி இப்போது அரசியல் பேசினேன் என்று கூறுவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். பாஜகவிற்காக இவர் பிரச்சாரம் செய்ய போகிறாரா அல்லது வேறு ஏதாவது அரசியல் அல்லது பதவிகள் இவருக்கு வரப்போகிறதா என்று கேள்விகள் இந்த பேட்டியால் எழுந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications