"இருப்பா இருப்பா.. அதெல்லாம் பேசக்கூடாது"- கட்சி பிரமுகர் கேள்வியால் பதறிப்போய் அதட்டிய ஜெயக்குமார்!
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிரஸ்மீட்டின் போது, உடன் இருந்த அதிமுக நிர்வாகி ஒருவர் செய்தியாளரிடம் கேட்ட கேள்வியால் பதறிப்போன ஜெயக்குமார், அதெல்லாம் பேசக்கூடாது என தடுத்தார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்புக்கு எதிராக ஈபிஎஸ் செய்த மேல்முறையீட்டு வழக்கில் நேற்று எடப்பாடி தரப்புக்கு சாதகமான தீர்ப்பு வந்தது.
இதையடுத்து ஈபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமி வீட்டில் குவிந்தனர். முக்கிய நிர்வாகிகள் பலரும் ஈபிஎஸ்ஸை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தபோது உடன் இருந்த ஈபிஎஸ் ஆதரவாளர் கேட்ட கேள்வியால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ஈபிஎஸ் டீம் உற்சாகம்
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கூடினர்.

ஒன்றரை கோடி தொண்டர்களும்
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியடையும் வகையில் உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும், தனி நீதிபதி உத்தரவு ரத்து ஆகிய இரு உத்தரவையும் அதிமுகவினர் எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

ஓபிஎஸ் நீக்கம் செல்லும்
இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ற அங்கீகாரத்தையும், ஒற்றைத் தலைமை செல்லும் என்ற அங்கீகாரத்தையும் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதன்மூலம் ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எந்த அடிப்படையில் பொதுக்குழுவை கூட்டினார்களோ அதையே பின்பற்றி பொதுக்குழு கூட்டப்பட்டது.

ஜீரோ ஓபிஎஸ்
ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாக கூறுகிறார்களே கேவியட் மனு தாக்கல் செய்வீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், "அது குறித்து சட்ட வல்லுநர்கள் குழு ஆலோசித்து முடிவெடுக்கும். எங்கு சென்றாலும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும்" என்று பதிலளித்தார். அரசியலில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு 'ஜீரோ' என்று பதிலளித்தார் ஜெயக்குமார்.

அப்படியெல்லாம் பேசக்கூடாது
செய்தியாளர் ஒருவர், போன வாரம் அவர்கள் தீர்ப்பை கொண்டாடினார்கள், இப்போது நீங்கள் கொண்டாடுகிறீர்கள், இறுதியில் யார் வெற்றியைக் கொண்டாடுவது எனக் கேள்வி எழுப்பினார். அப்போது ஜெயக்குமாருக்கு பின்னால் நின்ற அதிமுக பிரமுகர் ஒருவர் 'நீ எந்த டிவி?' என்கிற ரீதியில் ஒருமையில் கேள்வி கேட்டார். இதனால் பதறிப்போன ஜெயக்குமார், "இருப்பா இருப்பா.. அப்படியெல்லாம் பேசக்கூடாது" என அடக்கினார். இதனால், அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
-
பிரச்சாரத்தில் சட்டென கண்ணீர் மல்கிய அதிமுக வேட்பாளர்.. நெகிழ்ந்த கோவை கிராமம் -
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி?












Click it and Unblock the Notifications