கறார் காட்டிய அமித் ஷா.. உடனே பறந்து போன எடப்பாடி.. அதிமுக கூட்டணியில்.. யாருக்கு எத்தனை சீட்!
சென்னை: தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மதுரையில் நடந்தது. இந்த நிலையில், இன்று டெல்லிக்கு அவசரமாக சென்றுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார். கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் எண்ணிக்கையை பகிர்ந்துகொள்வது குறித்து ஆலோசனை நடக்கிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட் என்பதை எடப்பாடி முடிவு செய்து வைத்திருக்கிறார். அதனடிப்படையில் தான் இந்த பேச்சு வார்த்தை இருக்கும் என்கிறார்கள் அதிமுகவின் மூத்த தலைவர்கள்.

அதிமுக - பாஜக - கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்
அவர்களிடம் நாம் விசாரித்தபோது, ''பாஜகவுக்கு 25 சீட், பாமக அன்புமணிக்கு 18 +1, (டாக்டர் ராமதாஸ் இந்த கூட்டணிக்கு வந்தால் அவரது தரப்புக்கு 5 சீட்), தினகரனுக்கு 7 சீட் , ஜி.கே. வாசனுக்கு 3 என மொத்தம் 53 இடங்களை ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்துள்ளார் எடப்பாடி. அதற்கேற்ப பேச்சுவார்த்தையைத் தொடங்குவார்.
இதில், மிக அழுத்தம் தரப்பட்டால் ஓரிரு சீட்டுகள் எல்லா கட்சிகளுக்கும் கூடும். ஆனால், பாமக அன்புமணியைத் தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளுக்குமாக 50 சீட்டுகளை கேட்கிறது பாஜக. அதாவது, பாஜகவுக்கு 50 சீட்டுகள் தந்துவிட வேண்டும். பாமக அன்புமணிக்கு தேவையானதை எடப்பாடி ஒதுக்கிக் கொள்ளட்டும் என்பது பாஜக தலைமையின் திட்டம். ஆனால், இதற்கு எடப்பாடி சம்மதிக்காத நிலையில் தான் எடப்பாடியின் டெல்லி பயணம்'' என்கிறார்கள்.
டெல்லியில் எண்ணிக்கையும் தொகுதிகளையும் இறுதி செய்து விட்டு, மார்ச் 6-ந்தேதி கூட்டணிக்கான தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அதனை ரிலீஸ் செய்ய திட்டமிடுகிறார் எடப்பாடி. ஆனால், அவ்வளவு எளிதாக இதனை நடக்க பாஜக விட்டுவிடுமா? என்கிற கேள்வி அதிமுகவினரிடம் எதிரொலிக்கச் செய்கிறது.
தேர்தல் ஆணையம்
இதற்கிடையே, டெல்லியில் அமித் சாவை சந்திக்கும் போது சில கோரிக்கைகள் வைக்கவும் திட்டமிட்டுள்ளாராம் எடப்பாடி. குறிப்பாக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடும்.
2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநிலத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் பெரும் மாற்றங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) விதியின் பேரில், மாவட்ட ஆட்சியர்கள் உட்பட பல முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் கெடு விதித்திருந்தது. இதற்கான காலக்கெடு வரும் பிப்ரவரி 27-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தலைமைச் செயலாளர் முருகானந்தம் இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த டி. சினேகா, ஐஏஎஸ், தற்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த எஸ். மாலதி ஹெலன், ஐஏஎஸ், பதவி உயர்வு பெற்று அதே மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ளார்.
கரூர் மாவட்டம்: பொன்னேரி சார் ஆட்சியராக இருந்த கே. ரவிக்குமார், ஐஏஎஸ், கரூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுவாக தேர்தலுக்கு முன், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும் மாற்றப்படுவது இயல்பாக நடக்கும். ஆனால், இந்த உயரதிகாரிகளில் யாரெல்லாம் திமுகவின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்கிற ஒரு பட்டியலை தயாரித்து எடுத்துச் சென்றுள்ளார் எடப்பாடி. அந்த பட்டியலை அமீத்சாவிடம் கொடுத்து இவர்களை தமிழகத் தேர்தல் பணியில் ஈடுப்படுத்தக்கூடாது அல்லது வேறு மாநில தேர்தல் பணிகளுக்கு அனுப்பி வையுங்கள் என கோரிக்கை வைக்கவிருக்கிறாராம் எடப்பாடி என்றும் உயர்மட்ட தகவல்கள் கிடைக்கின்றன.
- சிறப்பு நிருபர் எழில்
-
LPG Gas Cylinder Shortage LIVE: பிரதமர் மோடி அவசர ஆலோசனை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
அமித் ஷா பற்றி அந்த ஒரு சொல்! சுல்தான்பூர் கோர்ட்டில் ராகுல் காந்தி இன்று ஆதாரங்களை தாக்கல் செய்வாரா -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications