பிறர் நம்பிக்கைகளை மதித்த பெரியார்.. துடித்துப்போய் மறைமலையடிகளிடம் மன்னிப்பு கேட்டது ஏன் தெரியுமா?
சென்னை: தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளை, சமூக நீதி நாள் என்று அனுசரிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
கடவுள் மறுப்பாளராக அறியப்பட்டாலும், கடவுள் பக்தி கொண்டவர்களுடனும் நட்பும், மரியாதையும் வைத்திருந்தவர் பெரியார்.
அதுபோன்ற சில சம்பவங்களைத் தொகுத்து உதயநிதி ஸ்டாலின் பாலோவர்ஸ் என்ற முகநூல் பக்கத்தில் இன்றைய தினம் வெளியிட்டு பெரியாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பெரியார் நடத்திய இல்லத்தில் கடவுள் வாழ்த்து
பெரியார் ஒரு பிளாஷ் பேக்: தான் நடத்திய ஆதரவற்றோர் இல்லத்தில் பெரியார் உட்கார்ந்து இருந்தார். அவரைச் சந்திக்க வந்த கல்வி நெறியாளர் நெ.து.சுந்தரவடிவேலு பெரியாருடன் பேசிக்கொண்டு இருந்தார். 'கடவுள் வாழ்த்து' என்ற பாடலை அந்தப் பிள்ளைகள் வாசித்ததை நெ.து.சு. கவனித்து, "உங்கள் பிள்ளைகள் மட்டும் கடவுள் வாழ்த்து படிக்கிறார்களே?" என பெரியாரிடம் கேட்டார்.

நாத்திகத்தை திணிக்கவில்லை
"ஆதரிக்க ஆள் இல்லாத ஆதரவற்ற பிள்ளைகள் இவர்கள். சோறு போட்டுக் காப்பாற்றுகிறேன் என்பதற்காக நாத்திகத்தை அவர்கள் தலையில் திணிக்கவில்லை. வயது வந்தால் அவர்கள் படித்துத் தெரிந்துகொள்வார்கள். தங்கள் சிந்தனையால் அவர்கள் நாத்திகர்களானால் சரி"-எனச் சொன்ன பண்பு, இன்று யாரிடம் இருக்கிறது?

வெளியிட உரிமை
'என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு'
- என்பதுதான் பெரியாரின் கொள்கை. தனது கருத்துக்கு எதிரானவர்கள் அனைவரையும் தன்னைவிட உயர்வாக மதித்தவர் அவர்.

மறைமலை அடிகளுடனான கருத்து வேறுபாடு
சைவ நெறியாளரான மறைமலை அடிகளுக்கும் பெரியாருக்கும் கடுமையான மோதல்கள் நடந்தன. சைவ சமயக்கூட்டத்தில் இவரது ஆட்களும், சுயமரியாதை இயக்கக் கூட்டங்களில் சைவ சமயத்தவரும் மோதிக்கொள்வார்கள். ஒருகட்டத்தில் இரண்டு இயக்கத்தவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டது. மறைமலை அடிகள், பெரியாருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதை 'திராவிடன்' இதழில் பிரசுரிக்கச் சொன்னார் பெரியார்.

மன்னிப்பு கேட்ட பெரியார்
ஆசிரியர் குழுவினர், 'மன்னிப்புக் கடிதம்' எனத் தலைப்பிட்டு அதை பிரசுரித்துவிட்டார்கள். துடித்துப்போன பெரியார், 'இந்தத் தலைப்புக்காக மறைமலையடிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்' எனப் பகிரங்கமாகப் பணிந்தார்.
அவரிடம் இந்த சமூகம் கற்றுக்கொள்ள நிறைய இருந்தது. அதனால்தான் காலங்கள் கடந்தாலும் இந்த சமூகம் அவரை நினைவில் வைத்திருக்கிறது. கொண்டாடுகிறது. தமிழ் சமூகம் நன்றியோடு நினைத்துப்பார்க்கும் ஈரோட்டு வெண்தாடி வேந்தன் பிறந்த தினம் இன்று. இவ்வாறு புகழஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications