டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டது ஏன் - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
கொரோனா தொற்று குறைந்து வருவதால் டாஸ்மாக் கடை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் டாஸ்மாக் கடை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பதாக நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இருப்பினும் இந்த ஊரடங்கு நீட்டிப்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழக பாஜக மற்றும் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கடந்த முதல் அலையின் போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, டாஸ்மாக் கடை திறப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது ஆளும் கட்சியாக மாறியுள்ள நிலையில் எதற்காக டாஸ்மாக் கடையை திறக்கிறது என்ற கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் இன்று மேட்டூர் அணையை திறந்து வைத்த பேசிய முதல்வரிடம் டாஸ்மாக் கடைகள் திறக்க உத்தரவிட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த முதல்வர் முதல்வர் மு.க ஸ்டாலின், கொரோனா குறைந்துள்ளதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் டாஸ்மாக் கடையை திறக்க உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த மு.க ஸ்டாலின்,வரும் 17ஆம் தேதி பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications