அக்னி கலச காலண்டர்.. குருமூர்த்தி.. சர்ச்சையை ஏற்படுத்திய நடிகர் சூர்யாவின் ஜெய்பீம்.. பிளாஷ்பேக்!
சென்னை: அக்னி கலச காலண்டரை ஜெய்பீம் படத்தில் வைத்ததற்கு கண்டனம் தெரிவித்து வன்னியர் சங்கத்தினரும் பாமகவினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன் நடிகர் சூர்யா மீது புகாரையும் கொடுத்தனர்.
ஜெய்பீம் என்ற திரைப்படம் ஓடிடியில் கடந்த மாதம் தீபாவளிப் பண்டிகையையொட்டி வெளியானது. இந்த படத்தில் இருளர் இன அப்பாவி மக்கள் மீது போலீஸார் பொய் வழக்குகளை எப்படி புனைகிறார்கள்.
அதை எப்படி நீதிபதியாக நடித்திருக்கும் சூர்யா உடைத்தெறிகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாகும். இது உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட கதையாகும்.

நியாயம்
உண்மையான சம்பவத்தில் பலதரப்பட்ட மக்களுக்கும் நியாயத்திற்காக நீதிக்காக குரல் கொடுத்த நிலையில் ஜெய்பீம் படத்திலோ கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே உதவியதாக கூறியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. மேலும் உண்மையில் ராஜாகண்ணுவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படும் போலீஸ்காரின் பெயர் ஆண்டனி.

குருமூர்த்தி கேரக்டர்
ஆனால் படத்தில் வந்த இன்ஸ்பெக்டரின் கேரக்டர் பெயர் குருமூர்த்தி, அவரது வீட்டில் வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசம் பதித்த காலண்டர் இருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காடுவெட்டி குரு என்கிற குருமூர்த்தியின் மகன் கனலரசு தனது தந்தையின் பெயரை கொடுமைக்கார போலீஸாருக்கு வைத்ததற்கு கண்டனம் தெரிவித்தார். சூர்யாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதை அடுத்து 4 போலீஸார் இருந்தால் சூர்யாவை காப்பாற்றிவிட முடியுமா, 1000 வன்னியர்கள் சென்றால் 4 போலீஸாரால் என்ன செய்துவிட முடியும் என கனலரசு பகிரங்கமாக மிரட்டினார்.

அங்கீகாரம்
இதையடுத்து வன்னியர் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ராஜா ஆகியோர் மீது 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்கப்பட்டது. மேலும் உண்மையை மறைத்து படம் எடுத்ததாக நடிகர் சூர்யா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. இந்த படத்தை விருது கொடுத்தோ பாராட்டியோ அங்கீகரிக்கக் கூடாது என மத்திய அரசுக்கு கோரிக்கையும் வன்னியர் சங்கம் சார்பில் வைக்கப்பட்டது.
Recommended Video

வன்னியர் சங்கத்தின் அடையாளம்
எனினும் அக்னி கலச காலண்டரை நாங்கள் வேண்டுமென்றே வைக்கவில்லை. அது வன்னியர் சங்கத்தின் அடையாளம் என்பதும் எனக்கு தெரியாது. இதில் சூர்யாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என கூறிய இயக்குநர் ஞானவேல்ராஜா தான் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துவதாக தெரிவித்திருந்தார். எனினும் குருமூர்த்தி கேரக்டர் குறித்து அவர் எதையும் சொல்லவில்லை. அனைவராலும் பாராட்டப்பட்ட இந்த படம் இத்தனை சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications