Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவையில் "கொரோனா தேவி"க்கு சிலை.. 48 நாள் பூஜைகள் ஆரம்பம்.. பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு

Subscribe to Oneindia Tamil

கோவை: உலகம் முழுக்க.. அதிலும் குறிப்பாக, நமது நாட்டில் கொரோனா பரவல் மிக மோசமாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கோவை நகரத்தில், கொரோனா தேவி என்ற பெயரில் அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

48 நாட்கள் சிறப்பு பூஜைக்கு பிறகு, கொரோனா தேவி சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

கொரோனா நோயை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க தடுப்பூசிகள், மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. நம்மூரில் ஏற்கனவே இருக்கும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள கூட மக்கள் அச்சப்படுகிறார்கள். ஆனால் இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகிறது. இளம் வயதைச் சேர்ந்த பலரும் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தேவி சிலை

கொரோனா தேவி சிலை

இந்த நிலையில்தான், கொரோனாவிலிருந்து தப்பிக்க கொரோனா தேவி சிலையை உருவாக்கி அதற்கு பூஜைகள் செய்ய தொடங்கியுள்ளனர் கோவை நகரில். காமாட்சிபுரி பகுதியிலுள்ள 51வது சக்தி பீடத்தில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காமாட்சிபுரி ஆதீனம், ஸ்ரீ சிவலிங்கேஸ்வரா சுவாமிகள் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதை பாருங்கள்.

பிளேக் மாரியம்மன் வழிபாடுகள்

பிளேக் மாரியம்மன் வழிபாடுகள்

கோவிட்-19 என்ற வைரஸ், மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. இதை மனதில் வைத்து, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம். 400 வருடங்கள் முன்பாக, பிளேக் நோய் பரவியபோது, பிளேக் மாரியம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு வழிபடப்பட்டது. காலரா, பிளேக் போன்ற கொள்ளை நோய்களின்போது, தங்களை காப்பாற்ற, அம்மனை வழிபட்டது வரலாறு.

இடையூறுகளை நிறுத்த

இடையூறுகளை நிறுத்த

கடவுள் மட்டுமே ஒரே நம்பிக்கை என்ற நிலையில், இதுபோல சிலைகள் வடிக்கப்பட்டு வழிபாடுகள் நடந்துள்ளன. சில மரங்கள் கூட வழிபாடு செய்யப்பட்டுள்ளன. முன்பு அப்படி நடைமுறை இல்லாதபோதிலும், இடையில் ஏற்பட்ட இடையூறுகளை களைய இப்படிச் செய்யப்பட்டன. அதே மாதிரிதான், கொரோனாவின் கோரத் தாண்டவத்தை நிறுத்தச் செய்ய, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம்.

மஹா ஹோமம்

மஹா ஹோமம்


48 நாட்கள் மகா யக்ஞம் நடத்தி, வழிபடுவோம். பக்தர்களுக்கு இந்த காலகட்டத்தில் பூஜையில் கலந்து கொள்ள அனுமதியில்லை. கோவில் பூசாரிகள் மட்டுமே பூஜைகள் நடத்துவார்கள். மாரியம்மன், மாகாளியம்மன் வழிபாட்டை போலவே, கொரோனா தேவி வழிபாடும் முக்கியமானது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+