கோவையில் "கொரோனா தேவி"க்கு சிலை.. 48 நாள் பூஜைகள் ஆரம்பம்.. பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு
கோவை: உலகம் முழுக்க.. அதிலும் குறிப்பாக, நமது நாட்டில் கொரோனா பரவல் மிக மோசமாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கோவை நகரத்தில், கொரோனா தேவி என்ற பெயரில் அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
48 நாட்கள் சிறப்பு பூஜைக்கு பிறகு, கொரோனா தேவி சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
கொரோனா நோயை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க தடுப்பூசிகள், மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. நம்மூரில் ஏற்கனவே இருக்கும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள கூட மக்கள் அச்சப்படுகிறார்கள். ஆனால் இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகிறது. இளம் வயதைச் சேர்ந்த பலரும் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தேவி சிலை
இந்த நிலையில்தான், கொரோனாவிலிருந்து தப்பிக்க கொரோனா தேவி சிலையை உருவாக்கி அதற்கு பூஜைகள் செய்ய தொடங்கியுள்ளனர் கோவை நகரில். காமாட்சிபுரி பகுதியிலுள்ள 51வது சக்தி பீடத்தில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காமாட்சிபுரி ஆதீனம், ஸ்ரீ சிவலிங்கேஸ்வரா சுவாமிகள் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதை பாருங்கள்.

பிளேக் மாரியம்மன் வழிபாடுகள்
கோவிட்-19 என்ற வைரஸ், மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. இதை மனதில் வைத்து, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம். 400 வருடங்கள் முன்பாக, பிளேக் நோய் பரவியபோது, பிளேக் மாரியம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு வழிபடப்பட்டது. காலரா, பிளேக் போன்ற கொள்ளை நோய்களின்போது, தங்களை காப்பாற்ற, அம்மனை வழிபட்டது வரலாறு.

இடையூறுகளை நிறுத்த
கடவுள் மட்டுமே ஒரே நம்பிக்கை என்ற நிலையில், இதுபோல சிலைகள் வடிக்கப்பட்டு வழிபாடுகள் நடந்துள்ளன. சில மரங்கள் கூட வழிபாடு செய்யப்பட்டுள்ளன. முன்பு அப்படி நடைமுறை இல்லாதபோதிலும், இடையில் ஏற்பட்ட இடையூறுகளை களைய இப்படிச் செய்யப்பட்டன. அதே மாதிரிதான், கொரோனாவின் கோரத் தாண்டவத்தை நிறுத்தச் செய்ய, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம்.

மஹா ஹோமம்
48 நாட்கள் மகா யக்ஞம் நடத்தி, வழிபடுவோம். பக்தர்களுக்கு இந்த காலகட்டத்தில் பூஜையில் கலந்து கொள்ள அனுமதியில்லை. கோவில் பூசாரிகள் மட்டுமே பூஜைகள் நடத்துவார்கள். மாரியம்மன், மாகாளியம்மன் வழிபாட்டை போலவே, கொரோனா தேவி வழிபாடும் முக்கியமானது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காதுக்கு வந்த தகவல்.. என்ன நடந்தாலும் விடக்கூடாது.. செந்தில் பாலாஜி போட்ட சபதம்.. என்னாச்சு? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications