தவெக போனவங்க எல்லாம் திரும்பி அதிமுக வராங்க.. பரபரப்பை பற்ற வைத்த வேலுமணி.. அதிர்ச்சியில் விஜய்
கோவை: சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடித்து எப்படியாவது ஆட்சியை பிடிக்க அதிமுக - பாஜக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரத்தில் திமுகவின் அதிரடி மூவ்களாலும், உள்கட்சி பிரச்சனைகளாலும் நெருக்கடிக்குள்ளாகி வருகிறார்கள். அதிமுகவில் உள்ள பல நிர்வாகிகள் திமுக மற்றும் தவெக கட்சிகளுக்கு மாறி வருகிறார்கள். இந்நிலையில் தவெக சென்றவர்களுக்கு அங்கு உரிய மரியாதை இல்லாததால் மீண்டும் அதிமுக வர தயாராக இருப்பதாக எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார் [SP Velumani].
சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. 4 முனை போட்டியால் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது [SP Velumani].

தவெகவுக்கு தாவும் திமுக
தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் திமுக மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு மாறி வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தொடர்ந்து, முன்னாள் சபாநாயகர் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனும் சமீபத்தில் தவெக வில் இணைந்தார். இது கொங்கு மண்டல அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, "எந்த காலத்திலும் திமுகவுக்கு ஓட்டு போட வேண்டாம். திமுக மட்டுமல்ல புதிய கட்சிகளையும் சேர்த்துதான் சொல்கிறேன். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். பயங்கரமாக பேசுகிறார். அவர் தான் பெரிய தலைவர் போல பேசுகிறார். அவ்வபோது வருகிறார். வந்து பேசிவிட்டு வீட்டிற்கு செல்கிறார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதை தப்பு சொல்லவில்லை.
தலைவர் எப்படி இருக்கணும்
எல்லோருக்கும் ஆசை இருக்கும். அந்த ஆசைக்கு நியாயம் இருக்க வேண்டும். ஒரு தலைவர் எப்பிட இருக்க வேண்டும். எம்ஜிஆர் எப்படி செயல்பட்டார் என எல்லோருக்கும் தெரியும். அவர் ஒரு நடிகராக மட்டும் செயல்படவில்லை. மக்கள் நலனில் அக்கறை எடுத்து செயல்பட்டு, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியதால் அவர் மகத்தான தலைவராக மாறினார்.
அப்போது திமுக ஆட்சிக்கு வருவதற்கே எம்ஜிஆர் தான் காரணம். கரூரில் அவரை பார்க்க வந்த அப்பாவி மக்கள், கட்சிக்காரர்கள் 43 பேர் உயிரிழந்தனர். அவர்களை கூட பார்க்காமல் விஜய் வீட்டிற்கு சென்றார். ஒவ்வொரு குடும்பத்தில் வாரிசுகள் கூட இல்லாமல் போய்விட்டனர். அதை கூட பார்க்காமல் ஓடிப்போனவர் விஜய். அவர் திரும்பி வரவே இல்லை. என்னவாக இருந்தாலும் அவர்களை நின்று காப்பாற்றியிருக்க வேண்டாமா.
கட்சி மாறியவர்கள் அதிருப்தி
உயிருக்கு போராடுபவர்களையும், உயிரிழந்தோரின் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூற வேண்டுமல்லவா. அவரின் செயல்பாட்டை எப்படி ஏற்க முடியும். எனக்கு விஜய் நண்பர். அது வேறு. பொது வாழ்விற்கு வரும்போது மக்களுக்காக செயல்படுபவர் தான் தலைவராக இருக்க முடியும். மக்கள் யாருக்கு வாக்களித்தாலும் செல்லாத ஓட்டாக மாறிவிடும். எங்களுக்கு மட்டுமே வாக்களியுங்கள்.
அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றவர்களுக்கு அங்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே பதவியும், மரியாதையும் வழங்கினால் அவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு வர தயாராக உள்ளனர். அதிமுகவில் கிடைக்கும் மரியாதை வேறு எங்கும் கிடைக்காது. கட்சி மாறுவதற்கு முன்பு இதை யோசிக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications