தமிழகம்தான் இதில் பெஸ்ட்.. 'முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி'.. திடீரென பாராட்டிய வானதி.. என்ன விஷயம்?
கோவை: சுகாதாரத் துறையில் தமிழகம் சிறந்து விளங்கி வருவதாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் தெரிவித்தார். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
3 நாளுக்கு மேல் காய்ச்சலா? டாக்டரை பார்த்தேயாகனும்! ஓமிக்ரான்னு மெத்தனம் கூடாது! நிபுணர் எச்சரிக்கை
அப்போது நாட்டிலேயே தமிழகத்தில்தான் ஒரே நாளில் 11 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படுகிறது என்று மோடி பெருமிதம் தெரிவித்தார்.இதில் நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் திறந்து வைத்துள்ளார் என்று பெருமையாக கூறினார். இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன் சுகாதாரத் துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக பாராட்டினார். இதில் மைல் கல்லாக தமிழகத்தில்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. இந்தியாவிலேயே 12 சதவீத மருத்துவ இடங்கள் இங்கு உள்ளன என்றும் கூறினார்.
நல்ல மருத்துவ வசதி கிடைக்கிறது
இதேபோல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட வானதி ஒவ்வொரு கிராம மக்களுக்கும் அவர்கள் இருக்கும் இடத்திலேயே நல்ல மருத்துவ வசதி கிடைக்கிறது என்றும் தெரிவித்தார். அப்போது நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
நீட் தேர்வு கட்டாயம்
இதற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், தமிழகத்துக்கு நீட் தேர்வு கட்டாயம் வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவே நீட் தேர்வுக்கு திமுக அரசு விலக்கு கேட்கிறது என்று கூறினார். புதிதாக உருவான மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளார்.
Recommended Video
பாஜக முயற்சி செய்யும்
தமிழக பாஜக அதற்கான முயற்சிகளை செய்யும் என்று பேசிய வானதி தமிழகத்தில் மருத்துவ இடங்கள் 6,000-ல் இருந்து, 10,000 ஆக உயர்ந்துள்ளன. இதில், 7.5 சதவீதம் ஒதுக்கீடு மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு செல்கின்றன என்றும் தெரிவித்தார்.