Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை பொருளாதார நெருக்கடி.. தமிழர்கள் நலன் காக்கப்படும்.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி

Subscribe to Oneindia Tamil

கோவை: உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் தமிழர் நலம் காக்கப்படும் என சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதியளித்துள்ளார்.

Recommended Video

    இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகள் நிலை என்ன? - அமைச்சர் செஞ்சி மஸ்தான் அளித்த பதில்

    கோவை சாய்பாபா காலனி அருகிலுள்ள கே.கே புதூரில் பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பில், அதன் தலைவர் ஹாஜி முஹம்மது ரபீக் தலைமையில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட அமைச்சர் மஸ்தான் பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், சலவை இயந்திரம், புடவை, உதவித்தொகை உள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    இலங்கை அகதிகளுக்கு பாதுகாப்பு

    இலங்கை அகதிகளுக்கு பாதுகாப்பு

    விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், "இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அனுமதி இல்லாமல் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த இலங்கையை சேர்ந்த 17 பேருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முடிவை பொறுத்து இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் நலன் குறித்து தமிழ்நாடு முடிவெடுக்கும்

    எல்லாம் தமிழக அரசின் செலவு

    எல்லாம் தமிழக அரசின் செலவு

    ரஷ்யாவின் தாக்குதலின்போது உக்ரைனில் சிக்கித் தவித்த மாணவர்களை தமிழ்நாடு அழைத்து வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். அதன் அடிப்படையில் அவர்களை அழைத்து வருவதற்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்று மாணவர்கள் தமிழ்நாடு அழைத்து வரப்பட்டனர். இதன் மூலம் 1,980 தமிழக மாணவர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் உக்ரைனிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.

    மருத்துவப்படிப்பை தொடர நடவடிக்கை

    மருத்துவப்படிப்பை தொடர நடவடிக்கை

    ஒரு சில மாணவர்கள் தாங்களாகவே வந்தனர். சிலர் விருப்பத்தின்பேரில் அங்கேயே தங்கி விட்டனர். உக்ரைனில் இருந்து தமிழகத்துக்கு தப்பி வந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பை தொடர்ந்து மேற்கொள்ள மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருகிறது. உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் தமிழர் நலனை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

    தமிழ்நாடு அரசே கூடுதல் நடவடிக்கை எடுத்தது

    தமிழ்நாடு அரசே கூடுதல் நடவடிக்கை எடுத்தது

    உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசை விட கூடுதல் கவனத்துடன் தமிழக அரசு செயல்பட்டது. அரசின் புறம்போக்கு நிலங்களில் தகுதி வாய்ந்த வீடில்லா ஏழைகளுக்கு வீடு தேவைப்பட்டால் வழங்க வேண்டும் முதலமைச்சர் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார். அந்த செயல்படுத்த திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முயற்சித்து வருகிறார்கள். இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் சமீரன்,மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+